தெரிய வேண்டியதில்லை! அவளுக்கும் நிறைய ஆசை இருந்தது. ஆர்கிடெக்ட் படிக்கனும்னு கனவு கண்டுட்டு இருந்தா, ஆனால் என்னால அவளுக்கு பீஸ் கட்ட முடியலை. ஆனால் நீ காலேஜ் போற வயசு வந்தப்போ அவளும் டீச்சராகி சம்பாதிக்க தொடங்கிட்டா. அவ மொத்த பணத்தையும் உன் படிப்பு, புக்ஸ், ட்ரஸ், மத்த செலவுன்னு உனக்காக தான் செலவு செய்திருக்கா. நீ எங்களை மறந்தா கூட பரவாயில்லை, சான்விக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்க, அதை நினைவு வச்சுக்கோ.”
“இது எனக்கே தெரியும் அப்பா. சான்வியை மட்டுமில்லை, உங்களையும் நான் மறக்க மாட்டேன். உங்க எல்லோரையும் பெருமைப் பட வைப்பேன். எனக்கு ஒரு மூணு வருஷம் டைம் இருந்தா போதும் அப்பா.”
ஷிவான்க் பதில் சொல்லாமல் பெருமூச்சை வெளியேற்றினார்!
நாட்கள் வேகமாக போய்க் கொண்டிருந்தன. ஆதித்யா சான்வியின் உதவியுடன் பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தான். அதேப் போல இன்னொரு பக்கம் போட்டிக்காகவும் தன்னை காஷ்யாப்புடன் சேர்ந்து தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தான்.
தன் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டு இருந்தது.
“ஆதி, நான் உன் கிட்ட முக்கியமா பேசனும்,” என காஷ்யாப் தொடங்கியப் போது, ஆதித்யா பெரிதாக எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் எழுதிய கோடில் சந்தேகம் கேட்கப் போகிறான் என்று நினைத்தான்.
“ஆதி, என்னால உன்னை காம்பெடிஷனுக்கு கூட அழைச்சுட்டுப் போக முடியாதுடா. சாரி, உனக்கு இது ஏமாற்றமா இருக்கலாம். ஆனால் என்னால முடியாதுடா!”
“காஷ்யாப்!” ஆதித்யா மொத்தமாக திகைத்துப் போனான். மூச்சு விடக் கூட அவனுக்கு சிரமமாக இருந்தது.
“ஏன் காஷ்யாப், எதுக்கு அப்படி சொல்ற?”