“அதெல்லாம் வேண்டாம் விடுடா.”
“இல்லை, விஷயத்தை சொல்லு காஷ்யாப்! என் கனவை மொத்தமா நொறுக்கிட்டு, என்னன்னு சொல்லாம இருந்தா எப்படி?”
“சரி நீ கேட்குறதுக்காக சொல்றேன்! உண்மையை சொல்றேன். அதனால நீ என் மேல கோபப் படக் கூடாது.”
“முதல்ல விஷயத்தை சொல்லு.”
“நீ கெட்டிக்காரன் ஆதித்யா. பயங்கர புத்திசாலியும் கூட. ஆனால் இந்த காம்பெடிஷன்ல ஜெயிக்குற அளவுக்கு உன் கிட்ட ஸ்டப் இருக்குறதா எனக்கு தோணலை. உனக்காக லட்சக் கணக்குல செலவு செய்றது வீண்ன்னு எனக்கு தோணுது. நான் ஜெயிக்க ஆசைப்படுறேன். அதே போல ஜெயிக்குற இடத்துல மட்டும் தான் இன்வெஸ்ட் செய்வேன். நீ இங்கே இருந்து வேலையை கவனி, நான் போய் பார்ட்டிசிபேட் செய்துட்டு வரேன்.”
“காஷ்யாப், விளையாடாதே! இது எனக்கு சீரியஸான விஷயம். உன் பேச்சை நம்பி என் அக்கா எனக்கு ஆயிரக்கணக்குல செலவு செய்து டிராவலுக்காக எல்லாம் வாங்கி கொடுத்திருக்கா! இது தான் என்னுடைய எதிர்காலதிற்க்கான சாவி. நாம ஜெயிக்கலாம் காஷ்யாப். எனக்கு நம்பிக்கை இருக்கு. ப்ளீஸ் இந்த பணத்தை கடனா மட்டும் கொடு, நான் கட்டாயம் திருப்பிக் கொடுத்திடுறேன்.”
“ஆதி, டெக்கியா இருந்தா மட்டும் இது மாதிரி காம்பெடிஷன்ல ஜெயிக்க முடியாது. அதுக்கு ப்ரேசெண்டேஷன் ஸ்கில்ல்ஸ், தைரியமா பேசுற ஸ்கில் எல்லாம் கூட வேணும். உன்னால அதெல்லாம் முடியுமா? காலேஜ் ப்ராஜக்ட் உனக்கு ஞாபகம் இருக்கா? அதை முடிச்சுட்டு எக்ஸ்டர்னல்ஸ் முன்னாடி ப்ரெசென்ட் செய்ய பயந்து நடுங்கினீயே, அது மறந்திடுச்சா.”
“நான் எதையும் மறக்கலை, காஷ்யாப். நாம டீமா ஒன்னா வொர்க் செய்யலாமே. என்னுடைய மூளை இல்லாம நீ ப்ரெசென்ட் மட்டும் செய்து என்ன ஆகப் போகுது??”