ரஜினியின் முகத்தில் வலி தெரிந்தது.
"இல்லை இன்ஸ்பெக்டர், எங்களுக்கு இன்னொரு மகள் இருந்தாள்!"
"இருந்தான்னு சொல்றீங்க???"
"போன வருஷம் வீட்டில நடந்த அக்சிடென்ட்ல இறந்துட்டா."
"ஓ! சாரி!"
"அவ தான் போயிட்டா இவனாவது சந்தோஷமா இருப்பான்னு பார்த்தால் இவன் வாழ்க்கை இப்படி, நான் என்ன செய்ய இன்ஸ்பெக்டர்!"
இது உண்மையான வருத்தம்!
"இன்ஸ்பெக்டர், நான் எல்லோருக்கும் நியூஸ் சொல்லனும். இன்னும் இந்திராவோட அம்மா அப்பாக்கு கூட தகவல் சொல்லலை."
"ஓகே ஓகே, யூ ப்ளீஸ் கேரி ஆன், சார். திரும்ப நான் உங்க கிட்ட பேச வேண்டி இருக்கும்!"
முத்துக்குமாரின் பெற்றோர் சென்றதும் அதுவரை சேகரித்திருந்த விபரங்களை தனக்குள் வைத்து யோசித்தான் தேன்.
பிறகு முத்துக்குமாரின் நண்பன் ஜமாலை வரச் சொன்னான்!
*************
"மிஸ்டர் ஜமால், இன்னைக்கு காலையிலே எதுக்கு முத்துக்குமாருக்கு போன் செய்தீங்க?" என ஜமால் வந்ததும் அவனிடம் விசாரித்தான் தேன்.
"இன்னைக்கு ஜாகிங் போக வேண்டாம்னு நினைச்சேன், சார். அதை சொல்ல தான் அவனை