தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 32 - பிந்து வினோத்
“மஞ்சு! என்ன ஆச்சு??? ஏன் இப்படி பேசுற???”
அமுதா அக்கறையும், உரிமையும் கலந்துக் கேட்கவும், மஞ்சுவிற்கு தொண்டை அடைத்தது!
‘மனோஜ் பழைய மாதிரி இல்லை அம்மு... அவர் மாறிட்டார்...’ என்று சொல்ல விரும்பிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தாள்.
அவளுக்கும் மனோஜிற்கும் நடுவே என்ன நடந்து இருந்தாலும், கணவனை அப்படி தோழியிடம் விட்டுக் கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை. அமுதா அவளுக்கு நெருங்கிய தோழி தான், ஆனால் அதற்காக அவளிடமும் மனோஜை குறைத்துப் பேச பிடிக்காமல் வாயை மூடிக் கொண்டாள்!
“என்ன அமைதியா இருக்க மஞ்சு? என்னடி ஆச்சு உனக்கு???”
“ப்ச்... பாதி தூக்கத்தில எழுப்பிட்ட அம்மு...” என்று சொல்லி சமாளிக்க முயன்றாள் மஞ்சு.
“அடிப்பாவி!!! பகல் டைம்ல தூங்க கூடாதுன்னு அவ்வளவு லெக்சர் கொடுப்ப??? அந்த கதை எல்லாம் இப்போ கிடையாதா??”
“எப்போவும் இருக்கு... நான் வீடை கிளீன் செய்தேனா அந்த டையர்ட்னஸ்ல கொஞ்சம் நேரம் படுத்தேன்...”
“ஹையையோ, நான் அந்த டைம்ல சரியா போன் செஞ்சு எழுப்பிட்டேனா??? சாரி டி...”
“ஹேய் ஓவரா பேசாதே... என்னை விடு... நீ எப்படி இருக்க??? பாப்பா எப்படி இருக்கா??”
“நல்லா இருக்கா மஞ்சு... நானும் நல்லா தான் இருக்கேன்... சூப்பர் பிஸி... சராவும் நானும் பிஸ்னஸ் எக்ஸ்டென்ட் செய்றோம். அதுல டைம் போறதே தெரியலை! புது ஆபீஸ் ஓபன் செய்தாச்சு. அதுக்கு ரெக்ரூட்மென்ட் வேலையும் இருக்கு இன்ப்ரா ஸ்ட்ரக்ச்சர் வேலையும் இருக்கு. ஓவர்ஸீ செய்ற வேலை தான்... ஸ்டில் தூங்க கூட டைம் இல்லை... நீ கேஷுவலா