தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 08 - யாஷ்
“சான்வி,’ மெதுவாக அழைத்தான் விவேக்.
அவனின் அழைப்பின் காரணமாக சான்வியின் கன்னங்கள் இன்னமும் அதிகமாக சிவந்தன.
விவேக்கின் இதயத் துடிப்பு அதிகம் ஆனது.
“சான்வி,” என்று மீண்டும் அவன் அழைத்தப் போது குரல் ரகசியமாக, கரகரப்பாக ஒலித்தது.
சான்வியோ இப்போதும் முகச் சிவப்பின் வழியாகவே அவனுடன் பேசினாள். செக்கச் சிவந்திருந்த அவளின் முகமும், அவளின் அருகாமையும் விவேக்கின் நாடி நரம்பை முறுக்கேற்றியது.
அதற்கு மேலே பேசிக் கொண்டிருக்காமல் அவளை காதல் பெருக அணைத்துக் கொண்டான் விவேக். அவளின் முகமெங்கும் முத்தமிட்டவன் இறுதியாக அவளின் உதடுகளில் தன் உதடுகளை பதித்தான்!
சட்டென்று தூக்கத்தில் இருந்து கண் விழித்து எழுந்து அமர்ந்தான் விவேக்!
சான்வியை அணைத்தது, முத்தமிட்டது அனைத்தும் கனவு என்று அவனால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நிஜம் போல, உண்மையாக நடந்ததுப் போல இருந்தது.
படுக்கையில் இருந்து எழுந்து குஷன் ஷோபாவில் அமர்ந்தான். மனம் இப்போது தடதடத்துக் கொண்டிருந்தது. அதை அடக்க ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.
அவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை. எப்போதாவது ரிலாக்ஸ் செய்ய ஒன்றிரண்டு பிடிப்பான் அவ்வளவே. இப்போது அது அவசியமாக தேவைப் பட்டது.
கனவில் அப்படி சான்வியிடம் காதல் செய்ததற்காக அவனுக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லை. அதற்கு பதிலாக உற்சாகம் பெருகி ஓடியது.