உங்க மேல நிறைய எதிர்பார்ப்புகள் வச்சிருக்கோம்.”
“நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையை நான் கட்டாயம் காப்பாத்துவேன் சரவணன்!” என்று மனோஜ் சொல்லவும், சரவணன் மீண்டும் மனோஜின் கையை பற்றி குலுக்கினான்.
“வெல்கம் டு அவர் டீம், மனோஜ்!”
“தேங்க்ஸ் சரவணன்!”
அவர்களுக்குள் உரையாடல் முடிவிற்கு வரவும், மனோஜ் மீண்டும் அமுதாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து எப்போதும் போல நட்புடன் புன்னகைத்தாள்.
“பெர்சனல் வேலையா சிகாகோ வந்தோம், மனோஜ். இன்னைக்கு பிஸி, வர வெள்ளி ஈவ்னிங் நீங்க ப்ரீயா? நாம எல்லோரும் டின்னர் போகலாம்?” என்று கேட்டாள் அமுதா.
“ஷுயர் போகலாம்...” என்ற மனோஜ், சின்ன இடைவெளி கொடுத்து,
“எங்க வீட்டுக்கு வரலையா அமுதா? மஞ்சுக்கு நீங்க இரண்டு பேரும் சிகாகோ வந்திருக்கது தெரியுமா?” என்று வினவினான்.
மீண்டும் அமுதாவிடம் ‘டோன்ட் கேர்’ பாவம் வந்தது!
“இல்லை...” என்று மெல்ல முனுமுனுத்தாள்.
மனோஜ் அமுதாவை அலுவலகத்தில் மட்டும் அல்லாமல் வீட்டு செட்டிங்கிலும் பார்த்திருக்கிறான். அவள் தான் சென்னையில் அவனுடைய வீட்டில் வந்து சில நாட்கள் தங்கி இருந்தாளே!!!
இப்போது அமுதாவிடம் வெளிப்படுவது மஞ்சு மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடு என்று மனோஜால் ‘லாஜிக்கல்’ ஆக ஊகிக்க முடிந்தது.