ஆனால் அவளுக்கு அவன் மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை, மஞ்சு மீது மட்டும் தான் கோபம் இருப்பதாக தோற்றியது. ஏன் அமுதாவிற்கு மஞ்சு மீது கோபம் என்று தான் அவனுக்கு விளங்கவில்லை. அவன் ரெகமென்டேஷன் வேண்டாம் என்றதற்கு மஞ்சு மீது எதற்கு கோபப்படுகிறாள்?
மஞ்சு அமுதாவிடம் அவனுக்கு அந்த வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டது மனோஜிற்கும் தெரியும். மஞ்சுவே அவனிடமே அதைப் பற்றி சொல்லி இருக்கிறாள்...
ஆனால், என்ன காரணம் சொல்லி மஞ்சு வேலை வேண்டாம் என்றாள்??
அமுதாவின் கோபத்தை வைத்துப் பார்க்கும் போது மனோஜ் சொன்னதை மஞ்சு சொன்னதாக தெரியவில்லை...
அப்படி என்றால் மஞ்சு வேறு காரணம் சொல்லி மறுத்திருக்கிறாள்... அதுவும் அமுதா இவ்வளவு கோபப் படும் அளவிற்கு என்னவோ நடந்திருக்கிறது...!
எதுவாக இருந்தாலும், பாவம் மஞ்சு... அவன் வேறு வேலை காரணமாக கோபத்தில் இருந்தான்... அமுதாவும் கோபத்தில் இருக்கிறாளே??!!
மனோஜின் மனம் சுட்டது...!
அதைப் பற்றி அமுதாவிடம் பேசுவதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது...
மனோஜின் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதியப் போதும் அவனின் கவனம் அவன் முன் இருப்பவர்களிடமும் இருந்தது...
அமுதா மஞ்சுவின் பெயர் வந்ததும் மெளனமாக பதில் அளித்ததற்கு சரவணனும் அவளை ஒரு பார்வை பார்த்தான்... ஆனால் அமுதா மேலே எதுவும் பேசவில்லை.
அதனால் சரவணனே,