வேலை கொடுத்திருக்கிறார்கள். அவனின் அனுபவ அறிவிற்கு மரியாதைக் கொடுத்து, சம்பள உயர்வு, பணி உயர்வு, கிரீன் கார்ட் என அனைத்தும் தர தயாராக இருக்கிறார்கள்.
இந்த வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே மஞ்சுவிற்காக எதையாவது சொல்ல போய் அனைத்தும் தவறாக போய் விட்டால் என்ன செய்வது?
அமுதா மஞ்சுவின் தோழி என்றாலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளனின் மனைவியும் கூட!
சட்டென்று மஞ்சு பற்றிய எண்ணங்களுக்கு கடிவாளம் இட்ட மனோஜ்,
“ஜாப் விஷயத்துல நான் எடுக்குறது தான் முடிவு, அமுதா. மஞ்சு அதுல எல்லாம் தலைப் போட மாட்டா...” என்று மட்டும் சொன்னான்.
மனைவி பக்கம் ஒரு பார்வை பார்த்த சரவணன், அவள் தொடர்ந்து பேச அனுமதிக்காமல்,
“நைஸ் மீட்டிங் யூ, மனோஜ்! அகெயின் வெல்கம் டு அவர் டீம். சீ யூ ஆன் ப்ரைடே...” என்றான்.
மனோஜும், “தேங்க்ஸ் அகேயின்!” என்று சொல்லி அவர்களிடம் விடைப் பெற்றான்.
திரும்பவும் அவனுடைய புது சீட்டில் வந்து அமர்ந்தப் போது மனோஜின் மனம் சுட்டது. தன்னை பெரிய சுயநலவாதியாக உணர்ந்தான்!
ஆனால், அவன் வேறு என்ன செய்திருக்க முடியும்??? என சொல்லி மனதை சமாதானம் செய்ய முயன்றான்... அதில் அவனுக்கு தோல்வி தான் கிடைத்தது...
அமுதாவிடம் உண்மையை சொல்லி இருந்திருக்கலாமே??? என அவனின் மனசாட்சியே அவனை குத்தி காயப் படுத்தியது.