(Reading time: 7 - 13 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“அக்ஷரா, கரக்ட் டைம்ல வந்திருக்க. நாம எடுக்க போற டாபிக் பத்தி யோசிச்சுட்டு இருக்கேன். காம்படிஷன் பத்தி படிச்ச நாள்ல இருந்தே எதை செய்றதுன்னு குழப்பமா இருக்கு. இப்போ தான் ஓரளவுக்கு தெளிவா யோசிக்கிறேன். இதெல்லாம் என்னோட ஐடியாஸ். உனக்கு ஏதாவது ஐடியா இருந்தாலும் சொல்லு. பெஸ்ட் ஐடியா செலக்ட் செய்வோம்.”

  

ஆதித்யா முதல் நாள் போல அவளை விலக்கி வைக்காமல் டீமில் ஒருத்தியாக சம வாய்ப்பு கொடுத்தது அக்ஷராவிற்கு பிடித்திருந்தது.

  

அவளும் ஆர்வத்துடன் மனதில் வந்த ஐடியாக்களை எல்லாம் சொன்னாள்.

  

ஆதித்யா கேலி, கிண்டல் செய்யாமல் அவள் சொன்ன சின்ன ஐடியாக்களை கூட பட்டியலில் சேர்த்து வைத்தான். அதுவும் அக்ஷராவிற்கு பிடித்திருந்தது. அவளோடு படிப்பவர்கள் எப்போதுமே அவளை மட்டம் தட்டி கேலி செய்ய வாய்ப்புக்காக காத்துக் கொண்டே இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் உடனேயே மட்டம் தட்டுவார்கள்.

  

ஆதித்யா ஒருவன் தான் அப்படி செய்யாமல் இருந்தான்.

  

அக்ஷரா, ஆதித்யா இருவரும் நேரம் போவதே தெரியாமல் ஐடியாக்கள் வருவது நிற்கும் வரை எழுதிக் கொண்டே போனார்கள். கடைசியில் வந்திருந்த பட்டியலை பார்த்து அவர்களுக்கே வியப்பாக இருந்தது.

  

“இதுல இருந்து ஒரு பெஸ்ட் டாப்பிக் எடுக்கனும் அக்ஷரா. அது மட்டும் இல்லாம அந்த ஐடியா இங்கே நான் நோட் செய்து வச்சிருக்க எல்லா பாயின்ட்சையும் கவர் செய்யனும்.”

  

“நானும் என்னோட பாயிண்ட்ஸ் சொல்லலாமா?”

  

“சொல்லலாமே!” என ஆதித்யா சொன்னதும் அக்ஷ்ராவிற்கு குஷி தாங்கவில்லை. இன்னும் அதிக ஆர்வத்துடன் கலந்துக் கொண்டாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.