இருவரும் பேசி, ஒவ்வொரு ஐடியா பற்றியும் விவாதித்து இறுதியாக எதை செய்வது என்ற முடிவிற்கு வந்த நேரம் ஹரிணி அவர்களை இரவு உணவு உண்ண அழைக்க வந்தாள்.
“அவ்வளவு நேரம் ஆச்சா, பெரியம்மா?”
“மணி எட்டு மேல ஆச்சு. அப்படியா நேரம் போறது தெரியாம வேலை செய்வீங்க?” கண்டிப்புடன் கேட்க முயன்றாலும் ஹரிணி பேச்சு மென்மையாகவே இருந்தது.
“எங்க டாபிக் செலக்ட் செய்துட்டோம் பெரியம்மா!”
“அது இருக்கட்டும். முதல்ல வந்து சாப்பிடுங்க. பெரியப்பாவும் இருக்கார். இப்போ வந்தா ஆதித்யாவுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கலாம்.”
“வா ஆதி, இப்போவே போகலாம். என் பெரியப்பாவை கண்ணுல பார்க்குறது ரொம்ப அபூர்வம்.”
அக்ஷரா அவள் பாட்டிற்கு ஆதித்யாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.
ஆதித்யாவிற்கு கூச்சமாக இருந்தது. கையை எப்படி விலக்கி கொள்வது என்ற யோசனையுடன் அவளுடன் சென்றான்.
தொடரும்...