(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 38 - பிந்து வினோத்

காதலுக்கும் மழைக்கும் ஒற்றுமை இருப்பதாக மனோஜிற்கு தோன்றியது.

  

மழையில் நனைவதும் சுகம்... அதே நேரம் மழை நின்றப் பிறகு மர இலைகளில் படிந்திருந்து மெல்ல விழும் நீர் சாரலில் நனைவதும் தனி சுகம் தான்...

  

மனோஜ் அவனின் மனம் கவர்ந்த மனைவியுடன் காதல் கரையை எட்டி இருந்தப் பிறகும், அவளுக்கு அருகேயே இருப்பதை அதைப் போன்ற சாரலின் சுகமாக உணர்ந்தான்...

  

மஞ்சுவும் கூட அவனை விட்டு விலக விரும்பாதவளைப் போல அசையாமல் தான் இருந்தாள்...

  

சில மணித்துளிகள் செல்ல... மெல்ல தலையை உயர்த்தி கணவனை நிமிர்ந்து பார்த்தாள் மஞ்சு...

  

அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

  

மஞ்சுவின் இதழ்களில் வெட்கம் கலந்த மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது...

  

மனோஜின் விழிகள் விரிந்தன...

  

எத்தனையோ முறை பார்த்து ரசித்தப் பிறகும் அவனின் மனதை கொள்ளை கொள்ளும் புன்னகை... முதல் புன்னகையில் அவனை தொபுகடீர் என காதலில் வீழ செய்தவள் இப்போதும் அதே மயக்கத்தை, கிறக்கத்தை கொடுக்கிறாள்...!!!

  

மனோஜின் முகம் தானாக குனிந்து மஞ்சுவின் உதடுகள் நோக்கி சென்றது...

  

மெல்ல கையால் அவனை தடுத்தாள் மஞ்சு...

  

“போதும் மனோஜ்...!!! நீங்க ஆபீஸ்ல இருந்த வந்ததுக்கு அப்புறம் எதுவும் சாப்பிடலையே... உங்களுக்கு பசிக்கலையா?? சாப்பிடுறீங்களா??”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.