“நாங்க எர்லி மார்னிங் போல விர்ஜினியா கிளம்பலாம்னு இருக்கோம், மனோஜ்... ஸோ, இன்னைக்கு சிக்ஸ் மாதிரியே டின்னருக்கு கிளம்பலாமா?” என்று மனோஜிடம் கேட்டான் சரவணன்.
“எனக்கு எந்த டைமும் ஓகே தான் சரவணன்... அமுதா வரலையா??”
“அவ ஒரு ரிலேட்டிவ் வீட்டுல இருக்கா... அங்கே இருந்து வந்திருவா... நான் அவக் கிட்ட டேபிள் புக் செய்ய சொல்றேன்... அட்ரஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... நாம பைவ் தர்ட்டி போல ஆஃபீஸ்ல இருந்து கிளம்பினா சரியா இருக்கும்னு நினைக்கிறேன்...”
“ஓகே சரவணன்...” என்று மனோஜும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டான்.
மீதம் இருந்த ஒன்றரை மணி நேரத்தில் அன்று செய்ய நினைத்திருந்த வேலைகளில் சிலதை முடித்த மனோஜ், மற்றவற்றை நோட் செய்து வைத்தான்.
சரவணன் சொன்னதுப் போல ஐந்தரை மணிக்கு கிளம்ப எழுந்தவன், மறக்காமல் மஞ்சுவிற்கு போன் செய்து தகவல் பகிர்ந்தான்.
அவளையும் சாப்பிட சொல்லி விட்டு சரவணன் சொன்ன ரெஸ்டாரன்டிற்கு சென்றான்.
அவன் வருவதற்கு முன்பே அமுதாவும் சரவணனும் வந்திருந்தார்கள்.
மனோஜை சரவணன் மட்டும் அல்லாது அமுதாவும் மகிழ்ச்சியுடனே வரவேற்றாள்.
“உங்களைப் பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன் மனோஜ்... உங்க டீம்ல வொர்க் செய்த டேஸ் எனக்கு கோல்டன் டேஸ் மாதிரி... நிர்மல் மட்டும் மாத்தி சொல்வான்...” என்று அமுதா சொன்னதற்கு மனோஜும் சிரித்தான்...
ஆனால், அமுதா வேண்டுமென்றே மஞ்சுவை குறிப்பிடாமல் இருக்கிறாள் என்ற எண்ணம்