அமிர்தாவின் கேள்வியை தொடர்ந்து திலீப் அவளை பார்த்தான். ஆனால், அப்போதும் வாயை திறக்கவில்லை.
அமிர்தாவின் முகத்தில் கோபம் வந்தது.
“நீங்க தான் ரோஹினியை கொலை செய்தீங்களா? சொல்லுங்க! சொல்லுங்க!”
அமிர்தாவின் சீற்றம் கூட திலீப்பை அசைக்கவில்லை! அமைதியாக நின்றான்.
“திலீப், உன் அமைதியை உடைக்குற நேரம் வந்திருச்சு. உண்மையை... நடந்ததை சொல்லிடலாம்...”
அதை சொன்ன ராஜசுலோச்சனாவை கெஞ்சுவது போல பார்த்தான் திலீப். மற்றவர்கள் குறிப்பாக அமிர்தா திகைப்புடன் அம்மாவை நோக்கினாள்.
தென்றல்வாணன் திலீப்பின் அருகே சென்றான்.
“நீங்க உண்மையை சொல்லலைனா, நாங்க உங்களை அரெஸ்ட் செய்து விசாரிக்க வேண்டி இருக்கும் திலீப்...”
“இல்லை இன்ஸ்பெக்டர், அதுக்கு அவசியம் இல்லை. என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்...” என்றாள் ராஜசுலோச்சனா.
“ஆன்ட்டி...”
“இல்லை திலீப், இதுக்கு மேல மறைச்சு வைக்க முடியாது. உண்மை வெளியே வர நேரம் வந்தாச்சு...!” என்று மருமகனிடம் பரிவுடன் சொன்ன ராஜசுலோச்சனா, மெதுவாக போலீஸ் பக்கம் திரும்பினாள்.
“இன்ஸ்பெக்டர், திலீப்க்கும் ரோஹினி சாவிற்கும் நேரடியா எந்த தொடர்பும் இல்லை... என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்...”
தொடரும்...