“ஓ காட்... அந்த லூஸு பொண்ணை என்னன்னு சொல்றது...” என்று மெல்ல புலம்பிக் கொண்டே நெற்றியை தேய்த்துக் கொண்டவள்... ஒரே வினாடியில் முடிவெடுத்தவளாக, சரவணனிடம்,
“ஆர்டர் செய்ததை எல்லாம் பேக் செய்ய சொல்லுங்க சரா... நான் அவக் கிட்ட நேரா போய் சில விஷயங்களை கேட்டே ஆகனும்...” என்றாள், வார்த்தைகள் நடுவே மூச்சு விடக் கூட இடைவெளிக் கொடுக்காமல்...
“அமுதா...” என்று சரவணன் மறுப்பாக சொல்ல முயற்சி செய்ய, அமுதா அவனை பேச விடவில்லை...
“இல்ல சரா நான் பேசியே ஆகனும்... நான் அவக் கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கேன்... அவளுக்கு அப்படி என்ன பொய் சொல்ற வேலை???”
“எல்லாத்தையும் சொன்னீயா???”
“அதெல்லாம் அப்புறம்... இப்போ உடனே போகலாம்...”
மஞ்சு மீதிருந்த அமுதாவின் கோபம் குறைந்து விட்டதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்த சரவணன்... அமுதாவின் பிடிவாதத்தை மனதுள் ரசித்துக் கொண்டே புன்னகையுடன்
“சரி, போகலாம் அமுதா...!!!” என்றான்!!!
தொடர்ந்து மனோஜ் பக்கம் பார்த்து ‘அனைத்தும் நலம்’ என்ற அர்த்தத்திலும் புன்னகைப் புரிந்தான்.
மனோஜும் அதைப் புரிந்துக் கொண்டு பதிலுக்கு புன்னகைத்தான்.
தொடரும்...