“இல்லை உங்களுக்கு எதுக்கு தொந்தரவு?”
“நீங்க லைன்ல இருங்க. நான் அக்ஷரா கிட்ட பேசுறேன்.”
சான்வி சொல்லும் வரைக்கும் விவேக்கிற்கு ஆதித்யா, அக்ஷரா பற்றி நினைவே இல்லை. அவள் கேட்டதும் அக்கறையுடன் அக்ஷராவிற்கு போன் செய்தான்.
“விவேக், நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்!” அக்ஷரா அழைப்பை எற்றதுமே சொன்னாள்.
“நான் அஞ்சு நிமிஷத்துல கிளம்புறேன். உங்க காம்படிஷன் எப்படிப் போச்சு?”
அக்ஷரா உற்சாகத்துடன் அன்றைய நிகழ்வுகளை அவனிடம் சொன்னாள். அனைத்தையம் கேட்டுக் கொண்டவன், “அப்போ நான் அரை மணி நேரம் கழிச்சு கிளம்பினா போதுமா?” என விசாரித்தான்.
“போதும் விவேக். நானும் ஆதியும் நிறைய டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு! நீ ஹோட்டல் பக்கத்துல ரீச் ஆனதும் திரும்ப கால் செய், நாங்க நேரா வந்திடுறோம்.”
“ஓகே, டன்!” அழைப்பை துண்டித்த விவேக், ஹரிணி போனில் இருந்த சான்வியை அன்-ம்யூட் செய்தான்.
“அவங்க இன்னும் காம்படிஷன் நடக்குற இடத்துல இருக்குறதால நெட் டிஸ்கனக்ட் செய்திருக்காங்க சான்வி. க்விஸ் நல்லா போச்சாம். ரிசல்ட்ஸ் நாளைக்கு தான் தெரியுமாம். அக்ஷரா உங்க தம்பி ஆதியை புகழ்ந்து தள்ளுறா. கட்டாயம் நெக்ஸ்ட் ரவுன்ட் போயிடலாம்னு அவளுக்கு தோணுதாம்.”
சான்வியின் முகம் சட்டென்று மலர்ந்தது. அதை விவேக் ரசித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மலர்ச்சியின் தொடர்ச்சியாக சான்வியின் முகத்தில் புன்னகையும் வந்தது.