“இவங்க இரண்டுப் பேரும் சண்டைப் போடுறாங்களா இல்லையா???” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
மனோஜ் இல்லை என்ற அர்த்தத்தில் தலையை அசைத்தான்.
“செல்லம் கொஞ்சிக்குறாங்க!” என்று கூடுதல் விபரமும் கொடுத்தான்.
அடுத்த பத்து நிமிடங்கள் சரவணனும், மனோஜும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மஞ்சுவும், அமுதாவும் தங்கள் கேள்வி கணைகளை தொடர்ந்துக் கொண்டே இருந்தார்கள்!
திடீரென்று நினைவு வந்தவளாக, மஞ்சு,
“ஐயையோ, பால்கோவா ஸ்டவ்ல வச்சிருந்தேன்... சிம்’ல குறைச்சு வச்சிருந்தேன்.. இருந்தாலும் அடிப் பிடிச்சிருக்கும்...” என்று சொல்லி, சமையலறை பக்கம் திரும்பினாள்...
“ஹேய், பால்கோவாவா? எனக்காக தானே செய்த??” என்று அமுதா கேட்க, மஞ்சுவும் மறுக்கவில்லை...
“பின்ன, வேற யாருக்கு... நீ தானே பால்கோவா பைத்தியம்...” என்றாள்.
“மனோஜ் போன் செய்தா நீ எடுக்கலையாமே! அப்புறம் எப்படி நான் வரது உனக்குத் தெரியும்???”
மஞ்சுவின் விழிகள் ஒரே ஒரு விநாடி கணவன் பக்கம் சென்று மன்னிப்பு கோரி விட்டு, மீண்டும் தோழி பக்கம் வந்தது...
“சிகாகோ வந்துட்டு நீ என்னைப் பார்க்காம போயிடுவீயா??? அந்த அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா???” என்று மஞ்சு கேட்க, அமுதாவின் முகத்தில் முதல் முறையாக புன்னகை தோன்றியது. தோழியின் கையை பிடித்துக் கொண்டவள்,