“ஆனாலும் மனோஜ் அளவுக்கு சரா ஒன்னும் ஜொள்ஸ் விடலை... இதுக்கு மேல நாங்க இங்கே இருந்தா சரியா இருக்காது... மனோஜ் கோபப் படப் போறார்...”
“யாரு மனோஜ் கோபப் படுறார்ன்னு நீ கிளம்புற??? எனக்கு பேபியா இருந்தப்போவே காது குதியாச்சுங்க...”
“ரொம்ப நல்லதா போச்சு... சரி பால்கோவா எல்லாம் எடுத்து பேக் செய்துக் கொடு...”
“அலையாதே... எல்லாம் உனக்கு தான்... எடுத்துத் தரேன்...”
மஞ்சு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் பால்கோவாவை வைத்து அமுதாவிடம் கொடுத்தாள்...
“அப்போ, நாங்க கிளம்புறோம்...” என்று அமுதா சொன்னதுமே மனோஜும், சரவணனும் எழுந்துக் கொண்டார்கள்...
அதைக் கவனித்த அமுதா,
“விட்டா மனோஜ் எங்களை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவார் போல் இருக்கே...” என்றாள் கேலியாக...!
“முதல்ல எழுந்தது சரா தான்... சும்மா மனோஜை ஏதாவது சொல்லாதே...”
“ஹுஹும்... மனோஜ் தான்...”
“சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்... இரண்டுப் பேரும் தான்!!!”
“அது பெட்டர்...! சரி, கிளம்புறோம் மஞ்சு... பால்கோவாவுக்கு தேங்க்ஸ்... இன்னொரு தடவை என்னை கோபப்பட வைக்காதே... அப்புறம் நான் என்னோட பேட் முகத்தை காட்ட வேண்டி இருக்கும்...”