தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 42 - பிந்து வினோத்
கீங் கீங் கீங்!
சத்தம் போட்டுக் கொண்டே தான் வீடு திரும்பி இருப்பதை அறிவித்துக் கொண்டிருந்த பறவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.
ஆரஞ்சு நிற உடலும், கிரே நிற இறகும் கொண்ட ராபின் பறவைகள் அவளின் கவனத்தை மொத்தமாக கவர்ந்திருந்தது...
இப்படி சத்தம் போடுகிறதே, அவை என்ன சொல்கிறது என்று யோசித்துப் பார்த்தாள்...
காலையில் உணவு தேடி கிளம்பிய நேரத்தில் இருந்து என்ன நடந்தது என்று தன் ‘அட்வென்ச்சர்ஸ்’ பகிர்கின்றதோ?? அல்லது ஒருவேளை இவ்வளவு நேரம் கழித்து சந்திக்கிறோம் என ஒன்றை ஒன்று வாழ்த்திக் கொள்கிறதோ...???
எதுவாக இருந்தாலும் மஞ்சுவிற்கு அவற்றை வேடிக்கைப் பார்க்கப் பிடித்திருந்தது...
அவளின் மனம் முழுவதும் மகிழ்ச்சி பெருகி இருந்தது...
சமீபத்தில் அவள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அவளின் வாழ்வில் பல புதிய அனுபவங்களை தந்திருந்தது...
சில நினைவில் வைத்துக் கொள்ளும் அனுபவங்கள் அல்ல...
ஆனால் அதுவும் கூட வாழ்வில் ஒரு அங்கம் என்பதை உணரும் அளவிற்கு அவளுக்கு மன முதிர்ச்சி ஏற்பட்டிருந்தது...
இந்த அனுபவம் யாரை நம்பலாம் யாரை நம்பக் கூடாது என்ற பாடத்தையும் அவளுக்கு கொடுத்திருந்தது...
கசப்பான மருந்தாக இருந்தாலும், அவளுக்கும் அமுதாவிற்கும் இடையே ஏற்கனவே இருந்த