தொடர்கதை - மானசா தீவு – 04 - விஜேஜி
“என்ட கனவு என்ன தெரியுமா மானசி? நாம இந்த தீவுல.. இது நிண்ட தீவு அறியும் அல்லோ? இந்த இடத்தை நான் வாங்கும்போது தான் நீ என் கண்ணுல பட்ட, இந்த வீட்டை நான் கட்டினேன், உடனே உன்னை கல்யாணம் செய்ஞ்சு இங்க கூட்டிட்டு வந்தேன், என்னென்னவோ கனவு கண்டேன், ஆனா ஒன்னும் நிறைவேறல, பட்சே ஐஞ்சு குட்டிகள் மட்டும் வந்துட்டு " என்று ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தான் .
அவள் மவுனமாக இருந்தாள்.. அவன் பேசிக் கொண்டே அவள் மடியில் தலை வைத்துக் கொண்டு, "இப்படி படுத்துக்கவா?" என்று அவன் அவளை கேட்கவும், அவள் உடனே அவன் தலையை தன் மடியில் தாங்கினாள்.
அவன் உணர்ச்சியோடு அவள் மடியில் தலை வைத்த உடனே கதறி அழுதான். "
“ஐயோ! என்ன ஆச்சு நாயர், ஏன் இப்படி கரையற?"
அவள் என்ன சொல்லியும் கேட்காமல் சிறிது நேரம் அழுது, அவனே தன்னை ஆசுவாசப் படுத்திக்க கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்ட்டான், "எண்ட மானசி, என்னை க்ஷமிக்கணும், ஞான் எவ்வளவு.....கேவலமா ஒன்னை எப்படியெல்லாம் புண்ணாக்கியிருக்கேன்.....ச்சே.. இப்ப நினைச்சா என் மேல எனக்கே வெறுப்பு வருது மானசி...என்ன க்ஷமிக்கணும் நீ....."
"யேய்…..இது ஒன்னும் வேணாம், எல்லாம் முடிஞ்சு போச்சு, இனி எல்லாம் மறந்து நம்ம குட்டிகளுக்கு நல்ல அம்மையும், அச்சனுமா இருந்தா மதி" என்று கூறுகையில் அவள் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
"நீ எப்படி திடீர்னு மாறின மானசி? இத்தனை வருஷமா என்ன கண்டதும் காணாமலே இருப்ப ஆனா இன்னிக்கு நான் இந்த மாதிரி ஒரு சேன்ஜ் எதிர்பார்க்கல.."
"நானுமே இத எதிர்பாக்கல நாயர், ஆனா, இந்த குட்டித்தான் என்ன மாத்துனது."
"அது என்ன?"