பத்தி பேசலேன்னா நமக்குள்ள சுமூகமாவே இருக்காது, உள்ள ஒன்னு வெளியே ஒன்னுன்னு நடிச்சிட்டிருப்போம்"
சிறிது இடைவெளி கொடுத்தான்.. அவள் எதுவும் பேசாமலிருந்தாள்.
"உன்னை முதல்ல பார்க்கச்சேயே முடிவு பண்ணிட்டேன் நீதான் என் மனைவின்னு, உடனே உன்ன பத்தி எல்லா விஷயமும் கலெக்ட் பண்ணேன். உங்க அப்பாகிட்ட நான் நேர பொண்ணு கேட்டேன் ஆனா அவர் ஜாதி பேர சொல்லி என்ன அசிங்க படுத்திட்டார். அதுக்கப்புறம் யோசிச்சு வேற வழி கிடையாது, நான் பேசினதுக்கப்புறம் உங்கப்பா சும்மா இருக்க மாட்டார், உடனே உனக்கு விவாஹம் ஏற்பாடு செய்துடுவார்னுதான் அப்படி முடிவு பண்ணேன்.என்னால உன்ன மறந்துட்டு வாழ முடியாதுடி, நினைச்சுண்டே அடுத்தவனுக்கு விட்டு கொடுக்க முடியாது அதான் முடிவு எடுத்தேன். அது உனக்கு பிடித்தமாயில்லேன்னு அப்புறம்தான் புரிஞ்சுது. எனக்கு நீ வேணும் என்னுடையவளா, ஆனா நீயோ, நான் வரும்போதெல்லாம் வெறுப்பா பார்த்த, என்ன பிடிக்கலேன்னு முகத்துக்கு நேரா சொன்னே, நான் வரும்போதெல்லாம் என்ன பார்த்து ஒரு பயத்தோடு ஒதுங்கினே, அதெல்லாம் கோபமா மாறி என்னை மிருகமா நடந்துக்க வச்சுது. எனக்கு நான் செய்யறது தப்புன்னு தெரியும். இங்க வரும்போது உன் கிட்ட அன்பா பேசணும், அன்பா நடந்துக்கணும்னு நினைச்சு வருவேன், இங்க உன்னோட நடப்பை பார்த்து கொதிச்சு மிருகமா மாறி, உன்னை புண்ணாக்கிடுவேன்... " என்று கூறியவன் அவள் காலை பிடித்துக் கொண்டு" என்னை மன்னிச்சுடு மானசா..." என்று கதறினான்.
"ஐயோ! என்ன நாயர் உங்களுக்கு பிராந்தா? என் கால பிடிச்சு.....ஐயோ என்ட குருவாயூரப்பா, நீங்க ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? எனக்கு இன்னும் பாவம் சேரும் அறியுமோ?"
"அதல்லாம் ஒன்னும் வராது கேட்டோ,ஞான் தான் நிறைய பாவம் செய்திருக்கேன் அதனால நான் இப்படி கேட்டா மட்டும் போறாது, ஆனா இதுக்கு மேல நான் எப்படி உன்கிட்ட மன்னிப்பு கேக்கண்ணு எனக்கு அறியல"
"சரி இதையே பேசினா இன்னும் மனசு கனத்துதான் போகும், இப்போ நமக்கு அரை டசன் குட்டிகள் எப்படியோ இவங்களை எல்லாம் பெரிசாக்கணும் அந்த பொறுப்பு இருக்கு அறியுமல்லோ?"