“ நான் உன் மேல ரொம்ப காதலோட இருந்தேன். நான் முறையா, உங்க அச்சன்கிட்ட வந்து உன்னை பெண் கேட்டேன். அவர் என்னை திட்டி அனுப்பிட்டார். அதான், இனி காலங் கடத்தினா உனக்கு வேற வரன் பார்த்துடுவார். அதானாலத்தான் உனக்கு தாலி கட்டிட்டேன். ஆனா, நீ என்ன வெறுத்த பார்வை பார்த்த , எனக்கு கோபம் அதிகமாயிட்டு, அதான் அப்படி நடந்துடேன் மானசி ….
எனக்கு எங்க அச்சன் அம்மேதான் எல்லாம்னு நினைச்சிண்டிருந்தப்போ, என்னை அவாகிட்டேர்ந்து பிரிச்சு கூட்டிட்டு வந்துட்டேளே, இத்தனை திவசமாச்சு அவாளை பார்க்கவேயில்லை, மனசு எத்தனை வருத்தமாயிருக்கு தெரியுமா? என் ஒரே தம்பி கார்த்திக் அவனையும் பார்க்கல, அவன்னா எனக்கு எத்தன பிரியம் தெரியுமா? இப்போ அவன் ஸ்கூல் பிளஸ் டூ, எப்படி படிக்கிறானோ எப்படி இருக்கானோ அரியல? நான் ரொம்பவும் துர் பாக்கியசாலி, பெத்தவா, கூட பொறந்தவன் கிட்ட இருந்து கூட பார்க்க முடியல"
அவன் மனசு வேதனை பட்டான், இப்படி வெள்ளந்தியா இருக்கிற பெண்ணை அவர்கள் பெற்றவர்களிடமிருந்து பிரித்து கொண்டுவந்துட்டோமே...."நீ என்ன விவாஹம் கழிச்சது பாக்யமா தோணலியா மானசா? " என்று சோகத்தோடு கேட்டான் மாதவன் .
"அப்ப தோணல..." என்றாள் தலை குனிந்து கொண்டு .
"இப்ப?"
"இப்பத்தான் உங்களுக்கு என் மேல அன்பு இருக்குன்னு தெரிஞ்சுண்டேன், இது வர என்ன வெறும்....."என்று கூறி தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டு வந்த கண்ணீரை அடக்க முற்பட்டாள் , மானசா.
"போதும் மானசா, ஏதாவது சொல்லி என்ன உன் சொல்லால் கொன்னுடாதே.....என்னோட தப்பு, என் ப்ரேமையை உன்கிட்ட எடுத்து சொல்லியிருக்கணும் , என் அன்பை வெளிப்படுத்தியிருக்கணும் அது செய்யாம வெறும் காமுகனா உன்கிட்ட நடந்துகிட்டேன், அதான் நீ என்னை புரிஞ்சுக்கல, ஒனக்கு புரிஞ்சுக்க நான் இடம் கொடுக்கல, உன் மனச ரொம்ப துன்புறுத்திருக்கேன், நீ என்ன காதலிக்கரையான்னு கூட தெரிஞ்சுக்கல.... "