"எல்லாம் முடிஞ்சு போச்சு நாயர், இப்ப நாம ஒருத்தருக்கொருத்தர் நல்லா ஒத்துமையா, இனியாவது புரிஞ்சு வாழனும் சரியா?"
"ம்ம் ..சரி, நீ சொல்றது ரொம்பவும் சரி, இப்பவாவது ஒரு சந்தர்பம் கிடைச்சுதே அதுக்கே அந்த குருவாயூரப்பனுக்கு தேங்க்ஸ் பறையனும்"
"இனி நீ கரையவே கூடாது கேட்டோ? நீ கரைஞ்சா எண்ட மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு. இனி எல்லாம் நல்லதே நடக்கும்....." அவன் அந்த தீவை உருவாக்கியவுடன் அதை விரிவாக்க முடிவு செய்து நிறைய வேலைகள் நடந்து கொண்டிருந்தன..அயல் நாடுகளில் தீவுகளில் நிறைய கேளிக்கைகள் இருப்பது போல மானசா தீவில் எல்லா கேளிக்கைகளும், அத்தோடு உல்லாச கப்பல்களும் வாங்கியிருந்தான் . அதை பற்றி மான்ஸாவிடம் கூறினான். அவள் ஆச்சர்யத்தில் கண்ணை பெரிதாக வைத்து வாயை பெரிதாக திறந்து அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஹேய் மானசா ! என்ன ஆச்சு? ஏன் இப்படி வாய பொளந்திருக்க?" அவள் தன் நிலைமையை உணர்ந்தாள்.
“நீங்க என்ன சொல்றீங்க, இந்த தீவு உங்களோடதா? அவ்வளவு பெரிய ஆளா நீங்க?"
"ஆமாம் மானசா, இது உன்னோடது, என்னோடது கூட இல்ல. இங்க என்னல்லாம் இதுவரை பண்ணியிருக்கேன், இனி என்னெல்லாம் பண்ணப் போறேன்னு உனக்கு காட்டறேன், நாளைக்கு காலை ரெண்டு பேரும் போய் பார்க்கலாம்"
"என்னால நம்ப முடியல நாயர்"
"இதுக்கெல்லாம் நீதான் முதலாளி மானசா"
"எனக்கு ஒன்னும் புரியல நாயர்"