"இதுக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன் மானசா" மெல்லிய சிரிப்பொன்றை கொடுத்து விட்டு "ஒவ்வொருமுறை நீ கர்பம் என்று ஆயா சொன்னவுடன் நான் இங்கே வரமாட்டேன் தெரியுமா? அப்போ நான் நிறைய டிராவல் செய்வேன், அப்போ எல்லா ஏற்பாட்டையும் செய்தேன். வேலையெல்லாம் நிறைய நடந்திட்டிருக்கு, தீவை சுத்தி கடலை பார்த்த மாதிரி ஐந்து நட்ச்திர ங்ஹோட்டல்ஸ், எல்லாம் வெளி நாட்டவர் வர அளவு அத்தனை உயர் ரகம், எல்லாம் நம்ம நாட்டு கலாச்சாரம் எடுத்துக் காட்டும்... நீ எப்பவாவது வெளியே போயிருக்கியா மானசி?"
"இல்ல நாயர், வெறும் டாக்டர்கிட்ட போகும்போது தான், ஆனா எதுவும் திரும்பிக்கூட பாக்கறதில்ல"
"அதான் உனக்கு இங்க பிடித்தம் இல்லையே"
அவள் வாய் திறக்கவில்லை.
அவளை தட்டிக் கொடுத்து "வா நாம முத முதல்ல ஒண்ணா சாப்பிடப்போறோம் வா போகலாம்"
"போகலாம் நாயர்" என்று ஏதோ யோசனையுடன் அவள் நடந்தாள், அவளையே பார்த்துக் கொண்டு அவள் தோளை தன் மேல் சாய்த்து கொண்டு சென்றான் மாதவன்
உள்ளே சென்று அவர்கள் சாப்பிட ஆரம்பித்த போது, " என்ன யோசிக்கற மானசா?"
"இல்ல, நம்ம குழந்தைகள் ஸ்கூல் பத்தி பேசணும் அதான் யோசிக்கறேன்"
"இதுல என்ன யோசனை, எர்னாகுளத்துல இருக்கற பெரிய ஸ்கூல்ல சேர்த்துடலாம் நீ எதுக்கு கவல படற?"
"சரி, உடனே அதுக்கு வேண்டிய ஏற்பாடு செய்யணும் அதான் உங்ககிட்ட எப்படி பேசறதுன்னு யோசிச்சிட்டுக்கிருந்தேன்"