"சாப்பாட்டு தட்டிலிருந்து எழுந்து அவளுடைய பின் நின்று அனைத்து, "அது எல்லாம் நம்ம குட்டிக, ஞான் அவங்களுக்கு அச்சன் அது மனசுல இருக்கோ? ஞான் எல்லாம் செய்யும் மானசா..அது மட்டுமில்ல நீ என்கிட்டே எதுவென்னா கேளு, ஆர்டர் போடு ஞான் எல்லாம் செய்ஞ்சு கொடுக்கும்.. பட்சே இந்த மாதிரி என்ன கேக்க ஒன்னொன்னும் யோசிக்க வேண்டா கேட்டியோ?. இந்த தீவுல வர வருமானம் எல்லாம் உனக்குத்தான், இதெல்லாம் உன் பேரிலேதான் நடக்க போறது அரிஞ்சோ? இனி இந்த மாதிரி பேசக் கூடாது கேட்டோ?" என்று கூறிவிட்டு அவள் தலையில் ஒரு முத்தம் வைத்து விட்டு தன் இடத்திற்கு சென்றமர்ந்தான்.
" எனக்கறியும் மானசா, உன் அச்சன், அம்மையை போய் பார்க்கணும் இல்லையா? அதான யோசிக்கற?"
அவள் ஆச்சரியத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
ஆமாம் என்று தலையாட்டினாள். கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வெளியே வரலாமா என்று எட்டி பார்த்தது
ஒரு பெரு மூச்சை வெளியிட்டான் பிறகு..
"நீ போறது எனக்கு ஒண்ணுமில்ல, நீ போய் நோக்கிட்டு வா.. பட்சே, அங்கே போய் உன் மனசு வேதனை பட்டு வரக் கூடாது . ஏன் சொல்றேன்னா எனக்கு உன்னோட அச்சன நல்லா தெரியும், கேட்டோ?"
"நீ கலங்க கூடாது மானசா, நீ கலங்கினா ஞான் மறிச்சு போகும், நீதான் என்னோட ஸ்ட்ரென்த், நீதான் என்னோட வீக்னஸ்."
அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, அவன் கையை தன்னை அறியாமல் பிடித்து அழுத்தினாள் . அந்த அழுத்தத்தில்,அவள் அன்பை உணர்ந்து, அவன் இன்னும் கரைந்தான்.
"எண்ட அச்சன் ரோஷக்காரர் தான், எனக்கு அது அறியும், பட்சே போய் பாக்கறேனே, அவங்கள பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு , என்க்கு போய் பாக்கணும் நாயர்."