தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 15 - யாஷ்
“ஆதி?” ஆதித்யா தூங்கி இருப்பானா என்ற சந்தேகத்துடன் கதவை மெதுவாக தட்டினாள் அக்ஷரா.
ஆதித்யா உடனடியாக கதவை திறந்தான்.
“உனக்கும் தூக்கம் வரலையா ஆதி?”
ஆதித்யா இல்லை எனும் அர்த்தம் வருவதாக தலையை ஆட்டினான்.
“எனக்கு சுத்தமா தூக்கம் வரலை ஆதி. நாளைக்கு காண்டஸ்ட் ரிசல்ட் எப்படி இருக்கும்னு நினைச்சு டென்ஷனா இருக்கு.”
“எனக்கும் அப்படி தான் அக்ஷரா!”
“வரீயா, சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாம்?”
ஆதித்யா கையில் பிடித்துக் கொண்டிருந்த மொபைலில் நேரத்தை பார்த்தான். நள்ளிரவு ஆக இன்னும் சில நிமிடங்கள் தான் இருந்தது.
“இந்த டைம்ல எங்கே வாக்கிங் போக முடியும்?”
“சும்மா வீட்டை சுத்தி நடந்துட்டு வரலாம் வா,”
“யாரும் உன்னை திட்ட மாட்டாங்களா??”
“என்னையா?? இங்கே எல்லோரும் இந்நேரம் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பாங்க!”
“அப்போ சரி.” ஆதித்யா வெளியே வந்தான்.
இருவரும் மெதுவாக நடந்தார்கள்.