...கண்ணோரம் மின்னும் அவள் காதல்...
காதில் விழுந்த பாட்டைக் கேட்டு அண்ணன் பக்கம் பார்த்தாள் பூஜா. அன்றுக் காலையில் இருந்து பலத் தடவை அவன் இதே பாடலை முணுமுணுப்பதைக் கேட்டு விட்டாள்.
பூஜா அவன் பக்கம் பார்வையை வைத்திருப்பதை உள்ளுணர்வு சொல்ல எஸ்.கே தங்கையை பார்த்து புன்னகை புரிந்தான்.
அவனுக்காக கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு அவன், பூஜா, ரோஹித் மூவரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்... அவர்களை யார் என்றே தெரியாதவர்களுக்கு கூட, அவர்கள் எங்கே சென்று வந்தார்கள் என்பது பூஜாவை பார்த்தாலே தெரிந்து விடும் அளவிற்கு அவளின் நெற்றி முழுக்க குங்குமமும், விபூதியும் ஆக்ரமித்திருந்தது!
எஸ்.கே’வின் புன்னகை இப்போது சிரிப்பாக மாறியது!
“என்ன அப்படி சிரிக்குற?” பூஜா சந்தேகத்துடன் கேட்டாள்.
“உன் மேக்கப் பார்த்தா பயமா இருக்கு!” என்று எஸ்.கே சொல்லவும், இப்போது ரோஹித்தும் சிரித்தான்.
“ரோஹித் நீயும் சிரிக்குற!” என்று கணவனிடம் சொன்னாலும் பூஜாவின் பேச்சிலோ முகத்திலோ கோபம் சிறிதும் இல்லை! அவளின் அண்ணன் நலமாக திரும்பி வந்து விட்டான் அதுவே அவளுக்கு போதும்.
“பூஜா ஒரு வருஷமா எப்படி இருந்தான்னு பார்த்திருந்தீங்கன்னா அவ்வளவு தான் சதீஷ். தயவு செய்து இனிமேல் நீங்க டிரைவர் வச்சே டிரைவ் செய்ங்க...” ரோகித் மனைவிக்கு பதில் சொல்லாது அவளின் அண்ணனிடம் சொன்னான்.
“நல்ல ஐடியா தான்...” என்ற எஸ்.கே காருக்கு வெளியே பார்வையைத் திருப்பினான்...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.