“யாரும் வரலை... எல்லோரும் பிஸியா இருக்காங்க... என் ஓய்ஃப்பும் அவளே மேனேஜ் செய்துக்குறேன்னு சொல்லிட்டா...”
“வாட்? அப்போ நீங்க தனியாவா இருக்கீங்க??? உங்க ஒய்ஃப் ரொம்ப போல்ட் மனோஜ்... என் ஒய்ஃப் குழந்தைன்னு கன்ஃபார்ம் ஆனதுமே அம்மா வந்தே தீரணும்னு அடம் பிடிச்சா... இன் அ வே அதுவே எனக்கும் வசதியா இருந்தது... என் ஒய்ஃப்க்கு சிசேரியன் வேற... ரொம்ப பயந்துட்டேன்... மதர்-இன்-லா கூட இருக்கவே எப்படியோ மேனேஜ் செய்தோம்...”
“என்ன செய்றது? அவங்களால இப்போ வர முடியலை...” என்று அப்போதைக்கு பதில் சொல்லி வேலையை தொடங்கினாலும், மனோஜின் மனதில் கடந்த சில நாட்களாகவே இருக்கும் குழப்பமும் கலக்கமும் இன்னமும் அதிகமானது என்னவோ உண்மை!
மஞ்சுவும் குழந்தை என்று தெரிந்ததும் இந்தியா போகிறேன் என்றுத் தானே சொன்னாள்... அவன் தானே பிடிவாதமாக வேண்டாம் என்று தடுத்தான்...!!! அது சரியான முடிவு தானா?
மனசுக்குள் கேள்விகள், குழப்பங்கள் ஓடினாலும் அவனின் வேலை என்னவோ சரியாக தான் நடந்தது...
அப்படி வேலைத் தொடர்பாக அவன் சரவணன் மற்றும் அமுதாவிடமும் அன்று பேச வேண்டி இருந்தது...
வேலை விஷயங்களை பேசி தொலைப்பேசி வழி மீட்டிங்கை முடிக்கும் முன், அமுதா,
“மனோஜ், மஞ்சு எப்படி இருக்கா? நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன்... அவக் கிட்ட பேசி ஒரு மாசம் மேல ஆச்சு...” என்று விசாரித்தாள்.
“நல்லா இருக்கா அமுதா...” என்று சொல்லும் போது மனோஜிற்கு ஒரு ஐடியா தோன்றியது... எனவே,