மாதவனுக்கு அவளுடைய அப்பாவின் செயல் புரிந்து விட்டது. அதனாலே அங்கே நின்று தாமதித்தால் அவர் கண்ணை மூடிக் கொண்டே இருக்க வேண்டும், என்று அவர்களை வெளியே அழைத்து கொண்டு வந்தான்.
"சரி அத்திம்பேர் நாளைக்கு பார்க்கலாம்," என்று கூறினான் கார்த்திக்.
வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டு டாக்டர் என்ன கூறினார் என்று கேட்டுக்கொண்டே இருந்தான்மாதவன். அன்று மான்சியின் அப்பாவின் நிலையை கேட்டு அறிந்து கொண்டான்.
அவர்கள் வெளியே சென்ற பிறகு, கார்த்திக் அப்பாவிடம் ஏன் இப்படி செய்தார் என்று கேட்டான் அவர் பதில் ஒன்றும் கூறவில்லை. ஆனால் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்தது பிறகு மனதிலிருந்து வருத்தப்பட்டு அப்பாவின் உடல்நிலை குறித்து விசாரித்தான் பிறகு அவரே கூறினார் எவ்வளவு அவர்களை விரட்டினேன், வெற்றுப் பிள்ளைக்காரி என்னை பார்க்க வந்தபோது வீட்டை விட்டு விரட்டி விட்டேன், இப்பொழுது என்னுடைய இந்த நிலைமையில் அவங்க ரெண்டு பேரும் வந்து என்னை இந்த அளவுக்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவளை நிமிர்ந்து பார்த்து பேச எனக்கு யோக்கியதை இல்லை கேட்டியா, அதான் கண்ணை மூடிக் கொண்டு விட்டேன்."
அப்போ அக்காவை இனிமே பார்க்கவே மாட்டீங்களா அப்பா? அக்கா இதுவரை யாரும் இல்லாம குழந்தைகள் பெற்று தனியாக வாழ்ந்து விட்டாள். இனியாவது நாம கூட இருக்கணும் அப்பா.
அவர் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு அவள் அப்பாவை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு தங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று நான் சொல்லும்போது அவள் அப்பா இல்லை என்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று விடுங்கள் என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு கூறினார்.
அவள் மனது மிகவும் வேதனைப்பட்டது, தன் அப்பா தன் முகத்தை கூட பார்க்க வில்லை என்று.