"கண்டிப்பா அப்பா உங்க ஆசீர்வாதம் வேணும் என் குழந்தைகளுக்கு."
"ஆசீர்வாதம் பண்றதுக்கு தான் கேட்டேன் கண்ணா."
வீட்டினுள் சென்றவுடன் அவரை மெதுவாக உட்கார வைத்துவிட்டு குழந்தைகளின் அறைக்குச் சென்று வேலைக்காரர்களுடன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்தாள்.
“இவள்தான் மூத்தவள் சஹானா” என்று கூறினாள்.
"மூத்தது பெண் குட்டியோ லக்ஷ்மிடா நம்ம வீட்டு லக்ஷ்மி!" என்று கூறினார் தந்தை, குழந்தையை தன்னிடம் அழைத்தார் ஆனால் அது பயந்து கொண்டு தன் அம்மாவின் பின்னாடி ஒளிந்து கொண்டது.
எல்லாக் குழந்தைகளையும் கொஞ்சினார்.
அங்கிருந்த வேலைக்காரர்கள் எல்லாம் வேறு ஒரு ஜாதியினர் என்று கொஞ்சம் யோசித்தார். அதைப் புரிந்து கொண்டாள் மானசா.
“ நானும், அம்மையும், சமையல் எல்லாம் செஞ்சுடுவோம் இவர்களெல்லாம் மேல் வேலைக்கு தான் கவலைப்பட வேண்டாம் அச்சா"
அவர், வெறும் தலையை ஆட்டி புன்னகைத்துக் கொண்டார். தன் மருமகனை பார்த்து கொண்டே.
ஒரு வாரம் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு தினமும் நடைப்பயிற்யின் போது அந்த தீவை ரசித்தார். இந்தத் தீவைப் பற்றி கேள்விப்பட்டு வந்த போதும் அது தன் மகள்துதான் என்று தெரிந்திருக்கவில்லை அவருக்கு இப்போது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஒருவாரம் எல்லாவற்றையும் காரிலேயே சென்று கண்டுகளித்தார்.