விசாரித்தாள், மானசா.
" நம்ம ஜெயா, அக்கா"
" நம்ம ஜெயா?" என்று கூறி யோசித்தாள், மானசா.
" நந்துவோட தங்கை?" என்று கேட்டாள் அவள் கண்ணத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டே.
" ஆமாக்கா."
" ரொம்ப அழகா இருக்க ஜெயா, நந்து எப்படியிருக்கான்?"
" அண்ணா நல்லாயிருக்கு அக்கா, நீங்க எப்படியிருக்கீங்க? இந்த தீவிற்கு வரணும்னு ரொம்ப நாளாக பிளான் செய்தோம், இப்பத்தான் எங்களுக்கு வர முடிந்தது."
" அப்படியா? இரண்டு நாள் இங்கேயே தங்கு, உனக்கு எல்லா இடமும் சுத்தி காண்பிக்க சொல்றேன்."
அது முடியாத அக்கா, நான் போய் ஆகனும், ஞான் அம்மை கிட்ட இங்க வரேன்னு சொல்லவே இல்லை. "
" ஏன் சொல்லிட்டு வரலை? மானசா அக்காவை பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வரதுதானே?"
" யாரோட போறேன்னு கேப்பாளே அக்கா,
நான் கார்த்திக்கோட போறது அம்மாக்கு தெரியாதே."
" அப்படின்னா?" என்று கேள்வியாக கார்த்திக்கையும், ஜயாவையும் மாற்றி, மாற்றி பார்த்தாள் மானசா.