" அதான்கா, உன்னோட பேசலாம் வந்தோம்" என்று தயங்கி, தயங்கி பேசினான் கார்த்திக்.
அவனே பேசட்டும் என்று காத்திருந்தாள் மானசா.
அப்போது மாதவன் வீட்டினுள் வந்தான். " ஹலோ கார்த்திக், எப்படியிருக்க? அச்சன், அம்மை எப்படியிறுக்காங்க, சுகந்தன்னே? என்று விசாரித்தான்
" எல்லாரும் சுகம்தான் அத்திம்பேர், நீங்கள் எப்படி இருக்கீங்க?" என்று விசாரித்தான்.
" இது, ஜெயா, எங்க அக்ரஹாரத்தில் இருக்கும் பெண்." என்று மானசா, மாதவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
அவளை, ஒரு புன்முறுவலுடன், " வரு( வா)" என்று ஒரு உபசார வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டான். பிறகு அவர்கள் பேச்சு கார்த்திக்கின், வேலையைப் பற்றி இருந்தது. கார்த்திக் படிப்பு முடிந்தவுடன் தன் கம்பனியில் அவனுக்கு மேனேஜர் பதவி கொடுத்திருந்தான், மாதவன்.
நல்ல சம்பளம், இப்போதைக்கு மோட்டார் பைக் கொடுத்திருந்தான்.
மானசாவிடம், " ஞான் போய் குட்டிகளை நோக்கிட்டு வரு " என்று கூறி உள்ளே சென்றான் மாதவன்.
மாதவன் சென்றதும், தன் அக்காவிடம் திரும்பி, " அக்கா, ஜெயாவும் நானும்…" என்று நிறுத்தினான் .
அவன் முகத்தில் வெட்கத்தைக் கண்ட மானசா, ஜெயயாவைப் பார்த்தாள் அவள் முகமும் சிவந்திருந்தது. அவளுக்கு ஏற்கனவே புரிந்திருந்தாலும், அவன் சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.
" மேலே சொல்லு, கார்த்திக்.."