(Reading time: 7 - 13 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“ஆதி!”

  

ஒரு குரல் ஆதியை அழைக்கவே அக்ஷரா பேச்சை நிறுத்தினாள். ஆதித்யா யார் என்று பார்த்தான்.

  

ஸ்ரீகர் கை அசைத்து அழைத்தது அவன் தான் என்பதை உணர செய்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த காஷ்யாப் முகத்தை திருப்பி கொண்டு நின்றான்.

  

“இவன் எதுக்கு கூப்பிடுறான்?” அக்ஷரா கேட்ட நேரத்தில் ஆதி ஸ்ரீகர், காஷ்யாப் பக்கத்திலேயே சென்று விட்டான்.

  

அக்ஷராவும் வேறு வழி இல்லாது அங்கே சென்றாள்.

  

“ஆல் தி பெஸ்ட் ஆதி. என்ன ப்ராஜக்ட் சம்பிட் செய்த?” ஸ்ரீகர் ஆதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.

  

“அக்ஷரா ஐடியா ப்ரொபோஸ் செய்திருக்கோம் ஸ்ரீகர். கிளைமேட் சேன்ஜ் பத்தின ஐடியா.”

  

ஆதித்யா அக்ஷ்ராவை சுட்டிக் காண்பித்து சொன்னதும் ஸ்ரீகர் மட்டுமல்லாது காஷ்யாப்பும் அக்ஷரா பக்கம் பார்த்தான்.

  

“எதுக்கு ஆதி உன் ஐடியா சம்பிட் செய்யலை?”

  

ஆதி பதில் சொல்ல இடம் கொடுக்காமல் காஷ்யாப் நடுவே பேசினான்.

  

“இதுல உனக்கு என்ன அதிசயம் இருக்கு ஸ்ரீகர்? அக்ஷரா சாதாரண பெர்சன் கிடையாது பெரிய பணக்காரி. அவ பேமிலி இன்டெர்வேன்ஷன்ல தான் இவங்க டீம் பைனல் ரவுண்டுக்கே போயிருக்காங்க. அக்ஷரா ஐடியா சம்பிட் செய்யாம இவன் ஐடியாவை போட்டா எப்படி லாஸ்ட் ரவுண்ட்ல ஜெயிக்குறது? அதுக்காக தான் செய்திருக்கான்!”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.