(Reading time: 6 - 12 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. நல்ல டாப்பிக் கொடுத்திருக்கோம். இப்போ நாம உட்கார்ந்து அது என்ன ஆகும், ஏதாகும்னு பேசுறதுக்கு பதிலா வெயிட் செய்றது தான் புத்திசாலித்தனம்.”

  

அக்ஷரா மனதுக்குள் ஆதியிடம் இப்போதே உண்மையை சொல்வதா பிறகு சொல்வதா என்று விவாதித்துக் கொண்டிருந்தாள்.

  

ஆதி சொன்ன பதில் வைத்து முடிவு வந்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தாள்.

  

அவர்கள் வெற்றி பெறாவிட்டால் உண்மையை சொல்லவே வேண்டாம். வெற்றிப் பெற்றால் தைரியமாகவே உண்மையை சொல்லி விடலாம்.

  

அக்ஷரா அதற்குப் பிறகு ப்ராஜக்ட் பற்றி யோசிக்கவே இல்லை.

  

எப்போதும் போல ஓயாமல் ஆதியிடம் கதைப் பேசிக் கொண்டிருந்தாள்.

  

ரிசல்ட் அறிவிக்கும் நேரம் நெருங்கிய போதும் கூட ஆதித்யா அளவிற்கு அக்ஷ்ராவிற்கு டென்ஷன் இருக்கவில்லை. ஆதியின் ப்ராஜக்ட்டை தேர்வு செய்திருப்பார்களா என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது.

  

ஆறு மணி ஆனதும் ஆர்கனைசர்கள் அனைவரும் குழுமி விட்டார்கள்.

  

உடனே போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் கூட மேடையை சூழ்ந்து நின்றார்கள்.

  

“இந்தப் போட்டியில் வந்த அனைத்து ஐடியாவும் அருமை,” என வழக்கமான பேச்சுடன் அறிவிப்பு ஆரம்பித்தப் போது அக்ஷ்ராவிற்கு இருப்புக் கொள்ளவே இல்லை! எப்போதடா வெற்றி பெற்றவர்கள் பெயரை சொல்வார்கள் என்று காதை கூர்மையாக்கி காத்திருந்தாள்.

  

“இதுக்கும் மேலே உங்களை காத்திருக்க வைக்காமல் பைனல் ரவுண்டுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் மூன்று ப்ராஜக்ட்களை சொல்லிடுறேன். இந்த மூணு ப்ராஜக்ட்ஸ்ல மெகா

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.