(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பாரதி அவனை ஒருப் பார்வை பார்த்து விட்டு,

   

"என்னவோ என் கதை எல்லாம் படிச்சிருக்கிற மாதிரி இவ்வளவு ஆர்வத்தோடு கேட்குறீங்க?" என்றாள்!

  

"நீங்க எழுதினா அது நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை தான்..." என்றான் விவேக் ஒரு புன்னகையோடு.

  

பாரதியின் பார்வை அவனின் புன்னகையில் நிலைத்தது. ஒரு ஆண்மகனின் புன்னகை இத்தனை வசீகரமாக இருக்க முடியுமா என்ன???

  

பாரதியின் மனம் தடுமாறினாலும், விவேக்கின் கண்கள் தன் முகத்திலே பதிந்திருப்பதை உணர்ந்ததும் அவசரமாகப் பார்வையை திருப்பிக் கொண்டாள் பாரதி!

  

"நான் ஒரு இருபது சிறுகதை கிட்ட எழுதி இருக்கேன்... அவ்வளவு தான்..."

  

"ஏன் அதுக்கு மேல நீங்க எழுதலை???"

  

"ப்ச்... என்னவோ தோணலை..."

  

"உங்க கதையோட காப்பி இருந்தா தாங்களேன்..."

  

"நீங்க கதைப் படிப்பீங்களா என்ன?"

  

பாரதியின் கேள்வியில் மிகுதியாக இருந்த வியப்பைக் கவனித்து விட்டு,

  

"நிறைய படிப்பேன்... எல்லா விதமான கதையும் படிப்பேன்..." என்றான் விவேக்!

  

"நிஜமாவா?"

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.