(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

“அக்ஷரா உன் கிட்ட கேட்கவே இல்லையா?”

  

இல்லை என்று சொல்ல நினைத்த ஆதித்யா உதடுகளை அழுந்த மூடிக் கொண்டான். அக்ஷரா அவனுடைய ஐடியா பெட்டர் என்று தான் பலமுறை சொன்னாள். அவனுக்கு தான் அதில் நம்பிக்கை இருக்கவில்லை.

  

“அவ சொன்னா தானே? உன் கிட்ட இது தான் ஆதி ப்ராப்ளம். டீம் டீம்ன்னு சொல்ற. அக்ஷரா டீமா எடுத்த முடிவை ஏத்துக்கலைன்னும் சொல்ற! நீ டீம்ல ஒருத்தனா இருந்தீயா?”

  

“அவ என் டீம்ல ஜாயின் செய்றேன்னு சொன்னப்போவே நான் சொல்றதை கேட்கனும்னு கண்டிஷன் போட்டேன்!”

  

சான்வி இமைகளை உயர்த்தி, உதடுகளை சுழித்து தம்பியைப் பார்த்தாள்.

  

“அவளுது நல்ல ஐடியாக்கா.”

  

“உன்னுடையதும் நல்ல ஐடியாவா தானே இருந்திருக்கு?”

  

“நான் தப்பு செஞ்சுட்டேன்னு சொல்றீயா?”

  

“இந்த அளவுக்கு உணர்ச்சி வசப் படாம பொறுமையா இருந்திருக்கலாம்னு சொல்றேன். துணைக்கு யாருமே இல்லாம நியூயார்க் போன. அங்கே அக்ஷரா, அவ ரிலேடிவ்ஸ் எல்லோரும் உனக்கு தங்க இடம், சாப்பிட சாப்பாடுன்னு கொடுத்து பார்த்துக்கிட்டாங்க. ஒரு மனஸ்தாபம்ன்னு வந்தா இப்படியா அவளை தனியே விட்டுட்டு வருவ? நீ நடந்துக்கிட்ட விதத்தை வச்சுப் பார்த்தா, உனக்கும் காஷ்யாப்புக்கும் பெருசா வித்தியாசம் இருக்கா என்ன?”

  

அக்ஷரா கூப்பிட கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலில் இருந்து வந்தது, ஹரிணியிடம் விளக்கம் சொல்லாமல் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியது அனைத்தும் இப்போது அதிகப்படியாக ஆதித்யாவிற்கே தெரிந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.