தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 48 - பிந்து வினோத்
"சரா, உங்களைப் பார்த்து சிரிக்கிறான் பாருங்க! நீங்க எங்க ஃபிரென்ட்ன்னு அவனுக்கும் தெரியுதுப் பாருங்க!"
சரவணனின் கையில் குழந்தையைக் கொடுக்காது தன் கையிலேயே வைத்துக் கொண்டுப் பேசிக் கொண்டிருந்த மனோஜை மலர்ந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு.
அவள் அருகே கையில் லயாவுடன் இருந்த அமுதா சத்தமில்லாமல் சிரிக்க பெரும் முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் சிரிப்பது உணர்ந்து, மஞ்சு மெல்ல அவளின் தோளில் தட்டினாள்.
"சிரிக்காதே அம்மு! அவரே நிறைய மாசம் கழிச்சு இப்போ தான் ரிலாக்ஸ்டா இருக்கார்!" என்று தோழியிடம் ரகசியமாக சொல்லவும் செய்தாள்.
"நான் மனோஜ் பார்த்து சிரிக்கலை மஞ்சு! சரா'வைப் பாரேன்! என்ன செய்றதுன்னு புரியாம முழிச்சுட்டு நிக்குறார்!" என்றாள் அமுதா.
மஞ்சு அப்போது தான் சரவணனை கவனித்தாள்! அமுதா சொல்வதன் காரணம் அவளுக்கும் புரிந்தது!
மனோஜ் மிட்டாயை முகத்துக்கு நேராக காண்பித்து காண்பித்துப் பேசும் சிறுவனைப் போல, குழந்தையை சரவணன் தொடவும் விடாது பேசிக் கொண்டே இருந்தான்! சரவணன் குழந்தையை கேட்டு கையில் வாங்குவதா, மனோஜிடம் இருந்து 'எஸ்கேப்' ஆவதா, அல்லது இப்படியே கேட்டுக் கொண்டு நிற்பதா என்ற குழப்பத்தில் இருப்பவனைப் போல என்ன செய்வது என்றுப் புரியாமல் இருந்தான்!
இப்போது மஞ்சுவும் சிரித்தாள்... அமுதா போலவே சத்தம் வராது சிரித்தாள்!
தோழியும் பார்த்து புரிந்துக் கொண்டாள் என்பதை உணர்ந்து,