(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 21 - யாஷ்

சான்வி கையில் இருந்த மொபைலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண் முன் தெரிந்த நம்பரை அழைக்க ஒரு வினாடி தான் ஆகும். அதை செய்வதற்கு அவளுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

  

மீண்டும் ஒருத் தடவை எதற்காக இதை செய்கிறாள் என்பதை நினைவுப் படுத்திக் கொண்டாள்!

  

ஆதித்யா, அக்ஷரா இருவரும் முதல் இடம் பிடித்த அவர்களின் ஐடியாவிற்கு ப்ரோட்டோடைப் உருவாக்க வேண்டும். அந்த ப்ரோட்டோடைப் எடுத்துக் கொண்டு தான் ஜக்ருதியை சந்திக்க வேண்டும்.

  

ஆதித்யாவால் தனியாகவே ப்ரோட்டோடைப் உருவாக்க முடியும். எனினும் அவன் அதை செய்யத் தயங்கினான். கடைசி வினாடியில் அக்ஷ்ராவை தனியாக விட்டு விட்டு கிளம்பி வந்து விட்டான். அக்ஷரா தனி ஆளாக ப்ரசன்ட் செய்து கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இதில் அவள் இல்லாமல் ஆதித்யா மட்டும் பயன் பெறுவது சரி கிடையாது.

  

சான்விக்கும் தம்பியின் காரணம் தவறென்று தோன்றவில்லை. அக்ஷ்ராவை சமாதானப்படுத்த அவளே பலத் தடவை அக்ஷராவிற்கு போன் செய்தாள். அக்ஷரா போனை எடுக்கவே இல்லை! மெசெஜூகளுக்கும் பதில் இல்லை.

  

சான்வி ஏதாவது செய்து அக்ஷ்ராவை சமாதானப் படுத்தாவிட்டால் ஆதித்யா, அக்ஷ்ராவிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு நழுவிப் போய் விடும்.

  

காரண காரியங்கள் மனசுக்குள் ஓடியதும் சான்விக்கு மீண்டும் தெளிவு வந்தது.

  

ஆனாலும் கண் முன்னே இருந்த நப்மரை பார்த்ததும் மீண்டும் தயக்கமும் வந்தது.

  

கண்ணை மூடிக் கொண்டு கிரீன் ஐகான் இருக்கும் இடத்தை ஊகித்து பிரஸ் செய்தாள். போன் ரிங் ஆகும் சத்தம் மெதுவாகக் கேட்டது.

  

கண்ணைத் திறந்துப் பார்த்தாள். ரிங்கிங் என்றது மொபைல்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.