தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 22 - யாஷ்
காலேஜ் முடிந்து வீடு வந்த அக்ஷரா தன் பேக் பேக்கை தோளில் இருந்து எடுக்கும் முன்பே, "ஹாய் அக்ஷரா" என்றக் குரல் கேட்டது.
அவள் வீட்டில் காலேஜில் இருந்து வந்ததும் அவளிடம் பேசக் கூட ஆள் இருக்கிறார்களா? அக்ஷரா சந்தேகத்துடன் நின்றாள்.
விவேக் அவள் அருகே வந்தான்.
"நான் நாளைக்கு இந்தியா ட்ராவல் செய்றேன், அக்ஷரா."
விவேக் சொன்னது அக்ஷ்ராவிற்கு தெளிவாகப் புரியவில்லை. விவேக் அவள் வீட்டிற்கு வந்திருக்கிறானா என்ற கேள்வியை யோசித்து முடிக்கும் முன்பே அவன் பேசி விட்டான்.
"எங்கேப் போற?" சந்தேகத்துடன் திரும்பக் கேட்டாள் அக்ஷரா.
"இந்தியா போறேன். அங்கே எனக்கு நிறைய கிளையன்ட்ஸ் இருக்காங்க. மீட் செய்யப் போறேன்."
"அப்படியா, சரி! உன் பிளைட் அட்லான்டால இருந்தா கிளம்புது? இங்கே வந்திருக்க?"
"உன் கிட்ட இருந்து தான் வீட்டுக்கு வர கெஸ்ட் கிட்ட எப்படி பேசனும்னு கத்துக்கனும்! என்ன ஒரு மரியாதைக் கொடுக்குற!"
"நீ கெஸ்ட் இல்ல விவேக். உன் கிட்ட இப்படி பேசலாம். உனக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது வேணுமா? சாப்பிட்டியா?"
"எனக்கு வேணும்னா நானே எடுத்துக்க மாட்டேனா? சும்மா சொன்னேன் அக்ஷரா. நான் உன்னைப் பார்க்க தான் வேலை மெனக்கெட்டு வந்தேன். எட்டு மணிக்கு திரும்ப நியூயார்க் கிளம்பிடுவேன்."