(Reading time: 4 - 7 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

"ஆமாம் வளர்ந்துட்டேன். கிளம்பலாம் வா!"

  

அக்ஷரா பெட்டியை கையில் எடுக்க விவேக்கும் நடந்தான்.

  

ஏர்போர்ட் செல்வதற்கு முன் அக்ஷ்ராவின் பெற்றோரை சந்தித்துப் பேசினான் விவேக். முதலில் அக்ஷரா தனியாக இந்தியா போவதா என்று யோசித்தவர்கள், விவேக்கும் செல்வது தெரிந்ததும் எந்த தடையும் இல்லாமல் சம்மதம் சொன்னார்கள்.

  

விவேக்குடன் முதல் தடவையாக சிறிய ஜெட் விமானத்தில் பறந்தப் போது அக்ஷ்ராவிற்கு குதுகலமாக இருந்தது. ஜெட் விமானத்தில் பறப்பதற்காக மட்டும் அல்லாது இந்தியா செல்வதற்காகவும் ஏற்பட்ட மகிழ்ச்சியால் வந்த குதூகலம்.

  

விவேக் அக்ஷராவை வேடிக்கைப் பார்க்க அனுமதித்து விட்டு தன் மொபைலை கையில் எடுத்தான்.

  

வாட்ஸ் அப்பில் இருந்த சான்வியின் நம்பரை தேடிக் கண்டுப்பிடித்தான்.

  

சான்வி அவனிடம் பேசியது இப்போதும் அவனின் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

  

"எனக்கு ஒரு உதவி வேணும். நீங்க தயவு செஞ்சு அக்ஷரா கிட்ட பேசி அவளை இங்கே வர சொல்லுங்களேன். அவளை நான் பத்திரமா பார்த்துக்குறேன். ஆதியையும் அவக் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றேன். ப்ளீஸ்!"

  

சான்வியின் வேண்டுதலை ஏற்று, அக்ஷராவுடன் கிளம்பி விட்டான்!

  

உதட்டில் புன்னகை மலர யோசித்தவன், சான்வியிடம் அவனும் இந்தியா வருவதை சொல்லாமல் "Akshara is starting to Chennai tomorrow" என்று மட்டும் மெசேஜ் அனுப்பினான்.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.