(Reading time: 6 - 11 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"நீ பேச இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு யார் அது போன் செய்தது??? அதே குரங்கு தானே??????" என்றாள்!

  

ந்து பதில் எதுவும் சொல்லாமல் கீதாவிடம் போனைக் கொடுத்தாள். காலர்ஸ் லிஸ்ட்டை பார்த்து அழைத்தது சஞ்சீவ் தான் என்பதை அறிந்துக் கொண்ட கீதா, இந்துவிடம் எதுவும் சொல்லாது, வீணாவை மட்டும் பார்த்து ஒரு புன்னகையை வீசினாள்... பின், அவளே சஞ்சீவின் நம்பரை டையல் செய்தாள்.

  

உடனே அழைப்பு ஏற்கப்பட்டு,

  

"ஹலோ அண்ணி, சாரி டிஸ்டர்ப் பண்றேனா?" என்று மறுமுனையில் சஞ்சீவின் குரல் கேட்டது!

  

"இல்லை சஞ்சீவ் சொல்லுங்க?"

  

"என்ன அண்ணி, நான் அவ்வளவு சொன்னப்புறமும் என்னை வாங்க போங்கன்னு தான் கூப்பிடுறீங்க?"

  

"சாரி சாரி சொல்லு சஞ்சீவ்..."

  

"இது எவ்வளவு நல்லா இருக்கு... நான் நுங்கம்பாக்கத்தில தான் இருக்கேன், உங்க ஃபிரெண்ட் வீடு, இந்த ஏரியான்னு தானே சொன்னீங்க... அது தான் கிளம்பிட்டீங்களான்னு கேக்கலாமுன்னு போன் பண்ணேன்.."

  

"வாவ்!!!! நீங்க நிஜமாகவே சமய சஞ்சீவி தான்... வீணா கார் வெளியே போயிடுச்சு... இந்து கார் அண்ணா நகர்ல இருந்த வர லேட் ஆகுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்... கரெக்டா உங்க, சாரி உன் போன் வந்துச்சு... நான் அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ சஞ்சீவ்..."

  

சஞ்சீவிடம் அட்ரஸ் பகிர்ந்து விட்டு, அவன் வருவதை மற்ற இரு தோழிகளிடம் தெரிவித்தாள் கீதா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.