(Reading time: 6 - 11 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

வீணாவின் குறும்புப் பார்வையை தவிர்ப்பதற்காக, ஜன்னல் பக்கம் திரும்பி நின்று இல்லாத இயற்கை அழகை ரசித்தாள் இந்து.

  

கீதாவும், வீணாவும் அதை புரிந்துக் கொண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்... ஆனாலும் தொடர்ந்து அதைப் பற்றி பேசாமல் தவிர்த்தார்கள்!

  

இந்துவின் காரை கீதாவின் வீட்டிற்கு வர சொல்லி விட்டு, இந்துவும் கீதாவும் சஞ்சீவுடன் அங்கே செல்வது என்று முடிவு செய்தார்கள்.

  

அதன் படி, இந்துவும் தன் டிரைவரை போனில் அழைத்து கீதா வீட்டிற்கு வர சொல்லி சொன்னாள்.

  

எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட அனைவரும் சஞ்சீவ் வருவதற்காக காத்துக் கொண்டு கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்!

  

அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், சிறிது நேரத்தில் சஞ்சீவ் அங்கே வந்து சேர்ந்தான்.

  

லக்ஷ்மியிடமும், வீணாவிடமும் விடைப் பெற்று, ரோஷினிக்கு 'பை' காட்டிவிட்டு, கீதா, இந்து இருவரும் சஞ்சீவுடன் காரில் கிளம்பினார்கள்.

  

அந்தக் காரில் சென்ற அரை மணி நேரமும், இந்து அமைதியாகவே இருந்தாள். சஞ்சீவும் கீதாவும் பேசியப் படி வந்தார்கள். பின் சீட்டில் அமர்ந்திருந்த கீதாவுடன் பேசும் போதும், சஞ்சீவின் பார்வை அவ்வப்போது கண்ணாடியில் தெரியும் தன் முகத்தில் பதிவதை அறிந்தப் போதும் இந்து கண்டுக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள்.

  

அவர்கள் சென்று சேரும் முன்பே இந்துவின் கார் அங்கே வந்து சேர்ந்திருந்தது.

  

அந்த காரின் அருகிலேயே சஞ்சீவ் தன் காரை நிறுத்தினான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.