(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

ஆனால் அது சான்விக்கு சரியாக பொறுந்தி இருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

  

விடியோவில் பார்த்ததை விட நேரில் இன்னும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாள். அவனின் மனதில் தானாக இதம் ஏற்பட்டது.

  

சான்வி அவன் யார் என்று தெரிந்து அவனைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவனை முதன் முதல் நேரில் சந்திக்கும் போது அவள் முகத்தில் ஏற்படும் உணர்வுகளை அவன் முழுவதுமாகப் பார்க்க விரும்பினான்.

  

அக்ஷரா ஆதித்யாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சான்வியிடம் மட்டும் பேசினாள்.

  

"வீட்டுக்குப் போய் பேசலாம், வா அக்ஷரா!" சான்வி அக்ஷ்ராவிடம் சொல்லிவிட்டு ஆதியைப் பார்த்தாள். ஆதித்யாவும் செய்தி புரிந்து உடனே அக்ஷ்ராவின் பெட்டியை தூக்கிக் கொண்டான்.

  

"நீ ஒன்னும் என் பெட்டியை எடுக்க வேண்டாம்! எனக்கே எடுத்துக்க தெரியும்." அக்ஷரா ஆதித்யா கையில் இருந்து பெட்டியை பிடுங்கி மீண்டும் தரையில் வைத்தாள்.

  

அதற்குப் பிறகும் ஆதித்யாவைப் பார்க்காது சான்வியிடம், "நான் தனியா வரலை, விவேக் கூட வந்தேன். அவன் நாங்க தங்க அரேன்ஜ் செய்திருப்பான்!" என சொல்லும் போதே விவேக் நின்றிருந்த பக்கம் கையால் காண்பித்தாள்.

  

விவேக் வந்திருக்கிறானா??? சான்வியின் முகம் விவேக் நின்றிருந்தப் பக்கம் திரும்பியது. அங்கே சாட்சாத் விவேக்கே தான இருந்தான்!

  

விவேக் தன் ரோல்லிங் சூட்கேஸை பக்கத்தில் வைத்துக் கொண்டு, கைகளை கட்டியப் படி நின்றிருந்தான்.

  

சான்விக்கு அவனும் வந்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. நம்பக் கூட முடியவில்லை!

  

சான்வி முகத்தை கவனித்த அக்ஷரா, "நான் வரது உங்களுக்கு தெரிஞ்சிருக்கே, விவேக் வரது

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.