This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
டிவியை ஒரு பக்கம் ஓட விட்டு ஹாயாக அமர்ந்து மங்கையர் மலர் படித்துக் கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ.
காற்றில் காதில் விழுந்த பாடலை தானாக கூட சேர்ந்து பாடினாள். கொஞ்சம் நேரம் முன்பு தானே இதே பாட்டை பாடினாள். ஒரே பாட்டை ஏன் டிவியில் திரும்ப திரும்ப போடுகிறார்கள்? டிவியைப் பார்த்தால் சமையல் ப்ரோக்ராம் ஓடிக் கொண்டிருந்தது..
தளபதி படப் பாட்டு எங்கே இருந்து கேட்கிறது? கவனித்துக் கேட்டாள். இனியவனா தமிழ் பாட்டைப் போட்டிருக்கிறான்?
ஜெயஸ்ரீக்கு நம்ப கஷ்டமாக இருந்தது. என்ன ஆகி விட்டது இவனுக்கு?
கேள்வி வந்த உடனேயே பதிலும் அவளுக்கு புரிந்து விட்டது.
கிச்சனுக்குப் போய் எட்டிப் பார்த்தாள்.
கோமதி சமைத்துக் கொண்டிருந்தாள். கஸ்தூரி துவைக்க துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். சுந்தரி. கிரைண்டரில் இருந்து மாவை அள்ளி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“சுந்தரி, இதெல்லாம் எதுக்கு நீ செய்ற?” – ஜெயஸ்ரீ.
“நான் சொன்னேன் ஜெயாம்மா உன் மருமக கேட்டா தான” – கஸ்தூரி
“பரவாயில்லை மாமி. எனக்கு ஒரு வேலையும் இல்லை. இதையாவது செய்றேன்” – சுந்தரி.
“சுந்தரி மத்த நாள் பரவாயில்லை. இன்னைக்கு சனிக்கிழமை. இனியா வீட்டுல இருக்கான். போ, போய் அவன் கிட்ட பேசு” – ஜெயஸ்ரீ
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.