தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
07. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
சஞ்சீவை வெகு நேரம் கனவுலகில் மிதக்க அனுமதிக்காமல், அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் அவனை அழைத்தாள்.
"சார், உள்ளே போய் பர்ஸ்ட் லெப்ட் எடுத்தால், நிலா மேடம் ரூம் வரும். அவங்க உங்களை இந்து மேடம் ரூமுக்கு கூட்டிட்டு போவாங்க." என்றாள் அவளின் வழக்கமான புன்னகையோடு.
அவளுக்கு நன்றி சொல்லி விட்டு உள்ளே சென்றான் சஞ்சீவ். நிலாவின் அறையை கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. கணினியில் எதையோ பார்த்து கொண்டிருந்த நிலா, அவனை பார்த்த உடன் புன்னகையோடு, இருக்கையில் அமர சொன்னாள். அந்த புன்னகையின் பொருள் அவனுக்கு புரிய தான் செய்தது. நிலாவும் அன்று அவர்கள் இருவருடன் இருந்தாள் தானே!
"வாங்க மிஸ்டர் சஞ்சீவ் போகலாம்.. உங்களுக்கு மேடம் ரூம் தெரியாதில்லை அதனால தான் என்னை கூட்டிட்டு வர சொன்னாங்க..."
"அது சரி... என்னை பார்த்தால் உங்க மேடத்திற்கு சின்ன குழந்தை மாதிரி இருக்கா என்ன? வழி சொன்னால் நானே போக போறேன்..."
நிலா புன்னகைத்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை.
"அதெல்லாம் இருக்கட்டும் அது என்ன அவங்களை மேடம்ன்னு ஓல்ட் மாடல்ல கூப்பிடுறீங்க?"
"வேற எப்படி கூப்பிட முடியும் சார்?"
"ஏன் அவங்களுக்கு பேர் இல்லையா என்ன?"
"என்ன செய்றது சார்... மேடம் இந்த விஷயத்தில் எல்லாம் ரொம்ப ஓல்ட் மாடல் தான்... நீங்க வேணும்னால் அவங்க கிட்ட சொல்லி பாருங்களேன்.."
இந்து என பெயர் பொறித்த கதவின் அருகில் நின்றவள், சஞ்சீவிடம் திரும்பி