"ஏன் அக்கா, ஒரு சனி ஞாயிறு எங்களுக்காக ஒதுக்க கூடாதா? இருந்தாலும் ராஜீவ் தான் உங்களுக்கு ரொம்ப முக்கியம் ஆயிட்டாரு...!!! இருங்க இந்து கிட்ட சொல்றேன்... அட ஆமாம் கேட்க மறந்திட்டேன் இந்து சஞ்சீவ் மீட்டிங் எப்படிப் போச்சு?"
சஞ்சீவ் இந்துவை சந்திக்க சென்றிருப்பதை கீதா வீணாவிடம் சொல்லி இருந்தாள்.
"ம்ம்ம்... உனக்கு பிடிச்ச மாதிரி நிறைய விஷயம் இருக்கு...." என்ற கீதா, இந்து தன்னிடம் சொன்னவற்றையும், அவள் சொல்லாது விட்டதை சஞ்சீவ் மூலம் அறிந்ததையும் சொன்னாள்.
"வாவ்... இந்து மேடம் கைக் கொடுக்க இவ்வளவு யோசிக்கிறாங்களாமா?? இருக்கட்டும் இந்த வாரம் என்கிட்டே சரியா மாட்டினாள்.... "
"ஹே வீணா, அவசரப் படாதே! இந்து பத்தி உனக்குத் தெரியாதா என்ன? நீ அன்னைக்கு அவளை கிண்டல் செய்ததால அவள் சஞ்சீவ் கிட்ட சரியா பேச கூட இல்லை... கொஞ்சம் வெயிட் பண்ணு... இந்து எப்படியும் நம்மக் கிட்ட எதையும் சொல்லாமல் இருக்க மாட்டாள்..."
ஃபோனில் பேசிக் கொண்டிருந்த கீதா, பால்கனியில் அரவம் உணர்ந்து திரும்பினாள். ராஜீவ் அங்கே நின்று மணி ஆகிவிட்டது என்பது போல் கைக் கடிகாரத்தைக் காட்டினான். ஒரு நிமிடம் என்று சைகை செய்து விட்டு, வீணா பேசுவதை கவனித்தாள் கீதா.
"ட்ரை பண்றேன் அக்கா... அப்புறம் எனக்கு அவினாஷ் புதுசா ரூபி நெக்லஸ் வாங்கி தந்தாரு..."
அடடா, நகையைப் பற்றி பேச ஆரம்பித்தால் வீணா எளிதில் நிறுத்த மாட்டாளே என்று எண்ணியப்படி கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, தோழியின் பேச்சில் குறுக்கிட்டாள் கீதா.
"ஓ, குட்! நான் நாளைக்கு ஃபோன் பண்ணி பேசட்டுமா, வீணா? எனக்கு இப்போ வேலை இருக்கு..."
"சான்சே இல்லை க்கா... நீங்க இப்போவே கேட்டு தான் ஆகனும்... இந்து இன்னைக்கு பிஸி...