(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சந்தோஷத்தையும் தாண்டி, இந்துவின் மனதுள் சிறு ஏமாற்றம் அல்லது ஏக்கம் ஏற்பட்டது. அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை!

  

அவன் கேள்வியில் தடுமாறி, முகம் சிவந்து, பின் சுதாரித்து கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்த சஞ்சீவிற்கும் ஏமாற்றம் தான்.

  

இருவருமே மனதில் இருந்ததை வெளி காட்டாது, அர்ச்சனாவிற்கு மரியாதை கொடுக்க எழுந்தனர்.

  

"உட்காருங்க... எனக்காக எழுந்து எல்லாம் நிற்க வேண்டாம்..."

  

அர்ச்சனா ஒரு குஷன் நாற்காலியில் அமரவும், அதற்கு பின்பே மீண்டும் அமர்ந்தவனை பார்த்து புன்னகைத்து விட்டு, அம்மாவிடம் திரும்பினாள் இந்து.

  

"சரிம்மா, அப்போ நான் கிளம்புறேன்..." என்றவள், இந்த முறை மறக்காது, சஞ்சீவின் பக்கமும் திரும்பி,

  

"சரி நான் கிளம்புறேன், மிஸ்டர் சஞ்சீவ்...." என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  

கள் செல்வதையே பிரியமாக பார்த்திருந்து விட்டு, சஞ்சீவிடம் திரும்பினார் அர்ச்சனா. அவனும் அந்த பக்கம் இருந்து தான் தலையை திருப்பியதாக தோன்றியது.

  

அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல்,

  

"சாரி சஞ்சீவ்... என்னாலே உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல்..." என்றார் அர்ச்சனா.

  

"என்ன ஆன்ட்டி, நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க... ஃபிரென்ட்ஸா இருந்துட்டு இதை கூட செய்யலைனா எப்படி?" என்ற சஞ்சீவ், தன் பாக்கெட்டில் இருந்த கவரை எடுத்து அரச்சனாவிடம் கொடுத்தான்.

  

"ரொம்ப தேங்க்ஸ், சஞ்சீவ்...." என்று சொல்லிக் கொண்டே அதை கையில் வாங்கிப் பார்த்த

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.