தென்றல்வாணன் குரல் என்னவோ போல இருந்தது.
“ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?”
“வேற எப்படி இருக்க சத்யா? சக்தி மாதிரி ஒரு ஹானஸ்ட் ஆஃபிசரை பார்க்கவே முடியாது. ஹன்ட்ரட் பர்சன்ட் சின்சியர் ஆபிசர். அவங்களை டீமோட் செய்து, அசிங்கப் படுத்தி, வெறுத்துப் போய் ரிசைன் செய்ய வச்சுட்டாங்க. இது போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மட்டுமில்லை, எல்லா மக்களுக்குமே பெரிய இழப்பு.”
“சரி, அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?”
“ஒன்னும் செய்ய முடியாது. கடைசியா சக்தியை டீமோட் செய்து மதியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்திருந்தாங்க.”
“நம்ம ஊருக்கா?”
“ஆமா! அவங்களுக்கு ஆர்டர் கொடுக்குறதுக்கு முன்னாடியே எங்களுக்கு அன்அஃபிஷியல் மெமோல அவங்க இங்க ஜாயின் செய்தப்புறம் யாரும் அவங்களுக்கு சப்போர்ட் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.”
“நீங்க ஒன்னும் செய்யலையா???”
“ஒன்னும் செய்ய முடியாது, சத்யா! சக்திக்கு கல்யாணம் ஆகலை, அவங்க தனி ஆள், வேலை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாங்க. நான் அப்படி யோசிக்கக் கூட முடியாது. நேர்மையா இருப்பேன், லஞ்சம் வாங்காம இருப்பேன், ஆனால் சில இடத்துல வளைஞ்சு கொடுத்து தான் போயாகனும். நமக்கு ஒரு பொண்ணு இருக்காளே. வேற என்ன செய்ய?”
“சரி விடுங்க! நீங்க டென்ஷன் ஆகாம வேற சானல் பாருங்க.”