அதுக்குள்ளே தீப்தி, “நான் மட்டும் என்ன வேணும்னேவா செய்யறேன். அவங்க கிட்ட பேச கூட தான் பேசறேன். நீயும் பார்த்துட்டு தானே இருக்க. அவங்க யாரும் தான் என் கூட சரியா பேச மாட்டேன்றாங்க” ன்னு சொன்னா.
அதுக்கு கவின் “நீ இங்க காலேஜ்ல நான் இருக்கும் போது மட்டும் எங்க கேங்ல இருப்ப, எல்லார் கிட்டவும் பேசுவ, இதே அவங்க எல்லார் கூடவும் தானே நீ ஹாஸ்டல்ல இருக்க, அப்ப யார் கிட்டயாச்சும் பேசறியா. நீ இப்படி இருந்தா, அவங்க எப்படி உன் கிட்ட ஒழுங்கா பேசுவாங்க”ன்னு சொன்னான்.
தீப்தி எதுவும் சொல்லலை.
எனக்கு என்னன்னா நீ என் ப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்டவும் ஒழுங்கா பேசி நீயும் அந்த கேங்ல ஒருத்தியா ஆகணும்ன்னு கவின சொன்னான்.
அவ அப்பவும் எதுவும் பதில் சொல்லலை.
அப்பறம் அவங்க ரெண்டு பேரும் க்ளாஸ் வந்துட்டாங்க. நானும் வந்துட்டேன்.
இப்ப என்னடான்னா, இந்த ரெண்டு நாளா, அந்த தீப்தி நம்ம கூட எல்லாம் இன்னும் பேசி பழக முயற்சி பண்றா, அன்னைக்கு கவின் சொன்ன மாதிரி உங்க கூட எல்லாம் ஹாஸ்டல்லயும் பேசறான்னு சொல்றீங்க.
நாம யாருமே, ஜெனியோட அப்பாவுக்கு யாரு போன் பண்ணி இருப்பான்னு யோசிக்கலை. இப்ப பார்த்தா அது அந்த தீப்தி தான்னு இப்ப தெரிஞ்சி போச்சி. அது கூட ஒன்னும் நாம அதிர்ச்சியாகற விஷயம் இல்ல, பட் இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒன்னு, இந்த விஷயம் கவின்க்கு தெரிஞ்சிருக்கு. அவன் அதை பத்தி நம்ம கிட்ட ஏதும் சொல்லலை. அதை விட அவளை நம்ம கூட எல்லாம் பேச வைக்கிறான்.
இன்னொன்னு, அவன் ஜெனி கிட்ட பேசினதுல கன்பார்மா ஒரு பதிலை சொன்ன மாதிரியே தெரியலை. ஒன்னு பிரேக் அப் பண்ணிக்கலாம்ன்னு கூட சொல்லிட்டு போயிருக்கலாம். இல்லைன்னா, நம்ம காலேஜ் முடியட்டும், நாம இதை பத்தி ரெண்டு பேரண்ட்ஸ் கிட்டவும் பேசலாம் அப்படின்னும் ஏதும் கிளியர் கட்டா பேசாம, அவனே நாம இப்ப பேச வேணாம்ன்னும் சொல்லி, அதை ஜெனி அவங்க அப்பா கிட்ட வேற சொல்ல வைச்சிருக்கான். இதுல இருந்து நாம என்ன நினைக்கறது. (லென்த்தா நம்ம அருண் பேசி முடிச்சிட்டார். யாருப்பா அங்க ஒரு கூல்ட்ரிங்க்ஸ் எடுங்கப்பா)
யோசித்து பார்த்தால் அருண் சொல்வது சரியாக தான் இருக்கிறது.
இதில் கவினை என்னவென்று நினைப்பது?
இப்போது எல்லோரின் பார்வையும் ஜெனியையே நோக்கியது.
Go to நினைத்தாலே இனிக்கும் episode # 18
Go to நினைத்தாலே இனிக்கும் episode # 20
நினைவுகள் தொடரும்...
Bala is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the two writers please...
{kunena_discuss:677}