(Reading time: 13 - 25 minutes)

 

" டியே .. உன் புருஷனுக்குத்தான் மரியாதையை தரல அட்லீஸ்ட் என் அம்மா பாக்யவதியின் கணவருக்காவது மரியாதை தாயேன் "

" போடி ... அங்கிளே என்னை ஒன்னும் சொல்லல.. உனக்கென்ன பொறாமை? "

" நீ வீட்டுக்கு போ.. நான் வந்து உன்னை வெச்சுக்குறேன்.. பை " என்றபடி அங்கிருந்து சின்ன புன்னகையுடன் சென்றாள் தேன்நிலா..என்னதான் மித்ரா நடந்ததை சொல்லாவிடினும்  அவளின் முகபாவனையிலேயே பெரிதாய் ஏதும் பிரச்சனை இல்லை  என்று கணித்தவள் நிம்மதியானாள்....

மீண்டும் செல்போனில் பாடல் பார்த்து கொண்டிருந்த மித்ராவின் மனதில் மீண்டும் ஷக்தி !

" என்னுடைய செல்ல சிடுமூஞ்சியே ! ரொம்ப பயந்துட்டியாடா ? வழக்கம் போல நீ மறுபடியும் தப்பான முடிவு எடுக்க கூடாதுனுதான் உனக்கு ஷாக் ட்ரிட்மென்ட் தர்ற நான் இங்க வந்துட்டேன் .... ரொம்ப பீல் பண்ணாத .. எப்படியும் கோபத்துல நீ குறட்டை விட்டு தூங்கி இருப்பன்னு தெரியும் .. பட் இட்ஸ் ஓகே .... அண்ட் நான் உன்கிட்ட சொல்லாம போனேன்னு நீ கோபப்பட முடியாதே ... ஏன் தெரியுமா ? ஏன்னா என் முசுடு புருஷனை பத்தி நல்ல தெரிஞ்சுதான் உனக்கு நான் வெளிய போறதா இமேல் பண்ணி இருக்கேன் .. சோ சொல்லாமல் போய்ட்டேன் நு சொன்னா, நீதான் இமேல் செக் பண்ணல்லன்னு நான் சொல்லுவேன் ... எப்படி உன் பொண்டாட்டி அறிவு ? மியுசியம் ல வைக்கலாம்ல ... நீ என்னை எப்படி திட்டுவன்னு இப்போ நெனச்சா கூட சிரிப்புதான் வருது .. அதென்னடா கோபம் வந்துட்டா மட்டும் அணையை உடைச்ச அருவியா கொட்டுற நீ .. சோ ச்வீட் ... சோ நைஸ்... ஐ  லவ் யு ஷக்தி "

இங்கு அவள் பேசியது அவனுக்கு எட்டியதோ என்னவோ, ஆழ்ந்த தூக்கத்தில் அருகில் இருந்த அவளின் தலையணையை மார்போடு அணைத்து " நானும்தான் மிது " என்றான் ஷக்தி ... ஐ லவ் யு டூ  என்ற  நான்கு வார்த்தைய கூட எப்படி இரண்டா சுருக்கி சொல்றான் பார்த்திங்களா ? இதான் நம்ம ஷக்தி ...

அங்கு நம்ம ஷக்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இங்கு உறக்கம்  தொலைத்த சங்கமித்ராவோ  தங்களின் காதலின் சங்கமத்தின் நினைவுகளை 'அன்றிலிருந்து இன்றுவரை ' என்றுபதுபோல் அசைபோட தொடங்கினாள்.

இன்னைக்கு கதை இவ்வளவுதான் .. ஹே என்ன சொல்லுற ? கான் டெக் திஸ் அப்படின்னு நீங்க கோபப்பட கூடாது .. அதாவது கொஞ்சம் வித்தியாசமான தொடக்கமா இருக்கட்டுமேனுதான் இந்த எபிசொட் நான் எழுதினேன்.. " இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ? " இந்த கதையின் ஆரம்பம் இந்த எபிசொட் இல்லை.. இது கதையின் pre-climax . இந்த கதை அடுத்த எபிசோட்ல ப்ளேஷ்பேக்கில் இருந்துதான் ஆரம்பாமாகிறது ... ஷக்தி - சங்கமித்ரா யார் ? எப்படி திருமணமானது ? அவர்களின் காதல் பயணம்தான் இந்த கதை ... கிளை நிறுவனங்கள் மாதிரி கிளை ஜோடிகளாய் நம்ம தேன்நிலா -மதியழகன் மற்றும் பலரும் இந்த கதையில் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த எபிசொட் நாம காதல் கதையை காலச்சக்கரத்தை பின்னோக்கி செலுத்தி தெரிந்துகொள்வோம் .. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்..நம்ம 'வேறென்ன வேணும் நீ போதுமே ' தொடரில் மீராவின் தோழனாக அறிமுகமான ஷக்தியின் கதைதான் இது .. அன்னைக்கு தலைப்பு ' உண்மை சொன்னால் நேசிப்பாயா ? ' அப்படின்னு சொன்னியேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது .. அந்த தலைப்பு ஷக்தியின் விருப்பம் .. இந்த தலைப்பு மித்ராவின் விருப்பம்.. மித்ரா கிழிச்ச கோட்டை தாண்ட வேணாமேன்னு ஷக்தி அவரின் விருப்பத்தை விட்டு கொடுத்துட்டாரு .... இப்படி இன்னும் என்னலாம் விட்டு கொடுத்தாங்க? எதையெல்லாம்  விடாமல் சண்டை போட்டாங்க? இதை நாம போக போக தெரிந்து கொள்வோம் .. நன்றி_/\​_

தொடரும்

Episode # 02

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.