(Reading time: 7 - 14 minutes)

 

டுத்த வரிகள் ஒலிக்க, அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு…

என்னை  விட்டு  நான்  போனேன்  தன்னாலே

கண்ணீருக்குள்  மீன்  ஆனேன்  உன்னாலே  

பேச  வழியே  இல்லை ..மொழியே  இல்லை

தவியாய்  நான்  தவித்தேன்

காதல்  கனவே  உன்னை ..முழுதாய் காண

பிறையை  நான்  இளைத்தேன்……..

அடுத்த வரிகள் ஒலிக்க, அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, வெளியே வர தயாராக இருந்த கண்ணீரை மறைக்க திரும்பி கொண்டாள்..

அவள் கண்ணீரை கண்ட உடன் அனிச்சையாய் கைகள் அவள் புறமாய் போக கட்டு படுத்தி தன்னையே கடிந்து கொண்டு வேகமாக காரை செலுத்தினான்.. அவன் ஆரம்பித்தது தானே அவன் தான் முடிக்க வேண்டும்...

இன்றே முடிக்கிறேன் என்று நினைத்து கொண்டான்.

கார் சரண்ராஜின் வீட்டை அடைந்ததும் ஏதும் பேசாமல் இறங்கி செல்லுபவளை பார்த்தவன் பெருமூச்சுடன் இறங்கி சென்றான். வேலையாட்கள் மதிய உணவை தயார் செய்து வைத்திருக்க பெண்கள் அனைவரும் பரிமாற, ஆண்களுடன் மது ஸ்வேதாவையும் கலையன பெண்கள் என கூறி அமர வைத்தனர்.

மேகா கற்பகத்தையும் அழைத்து வந்து அமர வைத்த பின், பரிமாறிவிட்டு பெண்கள் அனைவரும் தாங்களும் அமர்ந்து உண்டனர்.

பெரியவர்கள் தங்கள் வெளியான அரட்டை கச்சேரியை துவங்க, திவக்கரும் ஸ்ரீகாந்தும் செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.

கற்பகத்துக்கு ஓய்வு தேவையென அவரை உறங்க சொல்லிவிட்டு, தன்யாவும் ஆரதனாவும் ப்ரிஷனையும் ஆரத்ரிகவையும் தூங்க வைக்க சென்று விட,

ரகு ஸ்வேதா மேகா மது ஆதி ஐவரும் பால்கனியில் கதை பேசி கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் தோழியர் மூவரும் ஸ்வேதாவின் அறைக்கு சென்று விட..

இது தான் சமயம் என காரில் நடந்ததையும் இனி என்ன செய்யலாம் எனவும் புது தோழர்கள் அலசி ஆராய்ந்தனர்.  

அப்படியே நேரம் செல்ல மாலையும் வந்தது... கையேடு கொண்டு வந்திருந்த உடைகளை மது மேகா மாற்ற, ஸ்வேதாவும் புடவைக்கு மாறினாள்.

இள மஞ்சள் நிறத்தில் பட்டு சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட புடவையில் மெல்லிய அலங்காரத்தில் வெளிவந்தவள், தன் அன்னையிடம் காட்ட ஹாலிற்கு செல்ல அங்கே வருண் இருந்ததை பார்த்து பாதியிலே நின்றாள்.

அவனிடம் திவ்யா பேசி கொண்டிருக்க, சரண்ராஜ் மகளை பார்த்து வியந்து பாராட்டினார்

"குட்டிம்மா ரொம்ப அழகா இருக்க டா, திவ்யா அங்க பாரேன்"

"அடடா ஆமாங்க பாப்பாக்கு சுத்தி போடணும்" என்றவாறு கைகளிலே திருஷ்டி கழித்தார்.

அவளையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்த்து தடுமாறும் அழகை ரசித்தவாறு கண்களில் குறும்புடன் சிரித்தான்.

அவ்வளவு தான் எங்கு இருந்து நாணம் வந்ததோ சிட்டாக பறந்து சென்று விட்டாள் ஸ்வேதா.

வீட்டை சுற்றி பார்த்தவன் பால்கனிக்கு வர, அங்கே ரகுவும் ஆதியும் பேசுவதை மதுவின் மனதை மாற்றி எப்படி தன் காதலை சொல்வது ஸ்வேதாவிடம் எப்படி பேசுவது என ரகுவிடம் ஐடியா கேட்டு கொண்டிருந்த ஆதியை கண்டதும் இருந்த வெறுப்பெல்லாம் மறந்து போக ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டான்.

'இவனா?' என ஆதி திகைத்தாலும் உடனே சுதாரித்து கைகளை விளக்கி என்ன என்பது போல் வினவ.

அவன் சொன்ன விஷயம் கேட்க கேட்க மற்ற  இருவருக்கும் மனம் தெளிவானது. அங்கேயே ஒரு நல்ல பிளானை போட்டு அதை செயல் படுத்தவும் தயார் ஆனனர்.

மாலை நடக்க போகும் விபரீதம் அறியாமல், தனகல் காதலை வெளி படுத்த நினைத்தனர்.

இரவு....

'பளார்' என அவன் கன்னத்தில் அவள் அறைந்து விட்டு நகர்ந்தாள்.

இதை எதிர் பாராதவன், இயல்பாக கோபம் வர அவளை ஒரே எட்டில் தாவி பிடித்து இறுக அணைத்து தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவள் இதழ்களை சிறை பிடித்தான்..

பின் என்ன நினைத்தானோ அதே வேகத்தில் அவளை உதறி விட்டு ஒரு வெற்று பார்வையுடன் விறு விறுவென சென்று விட்டான்...

அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அதை பார்த்தவர்கள் அவளை விடவும் அதிர்ந்து போயினர்.

காதல் பெருகும்… 

Episode # 10

Episode # 12


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.